மேலும் அறிய

PM Modi Interview: 2047-இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது : பிரதமர் மோடி உறுதி

2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது எனவும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது எனவும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:

''விரைவில் இந்தியா உலகின் சிறந்த 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளும் வகையில், வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு இன்று பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தீவிரவாதிகள் டார்க் நெட், மெட்டே வெர்ஸ், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைத் தங்களின் தீய நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவை நாடுகளின் சமூக கட்டமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். 

சைபர் அச்சுற்றுத்தல்களை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இணைய பயங்கரவாதம், ஆன்லைன் தீவிரமயமாக்கல், பணமோசடி ஆகியவை இதன் உதாரணங்கள் ஆகும். 

பசித்த 100 கோடி வயிறுகளைக் கொண்ட நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியாவில் தற்போது, 100 கோடி உத்வேக மனங்களும் 200 கோடி திறன்வாய்ந்த கைகளும் இருக்கின்றன. 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது.

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாடு தொடர்பான பணிகளுக்கு சுமார் 1.5 கோடி இந்தியர்கள் பங்காற்றி இருக்கின்றனர். ஜி 20 தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுக்கு ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தருவோம். 

நம்மிடம் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்மைத்துவம் (democracy, demography and diversity) ஆகிய மூன்று 'D'க்கள் இருக்கின்றன. நான்காவதாக, வளர்ச்சியை (development) சேர்த்திருக்கிறோம். பொறுப்பற்ற நிதிக் கொள்கைகளால், ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்''. 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மேலும் 2047 எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய  பிரதமர் மோடி, ‘’நம் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறந்த நிலைக்குச் சமமாக இருக்கும். இயற்கை மற்றும் கலாச்சாரம் இரண்டிலும் அக்கறை செலுத்திக்கொண்டே இதை அடைய முடியும்’’ என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த அணுகுமுறை, 21ஆம் நூற்றாண்டுக்குப் போதுமானதாக அமையாது என்றும் தெரிவித்தார். 

இதையும் வாசிக்கலாம்: Parliament Special Session: கேள்வி நேரமும் இல்லை, தனிநபர் பிரச்சனையும் பேசக்கூடாது.. புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget