மேலும் அறிய

"ஒரு புல்லட்க்கு 10 புல்லட்களை பதிலடியா தாங்கனு சொன்னேன்" தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சர்ச்சை!

ராணுவ வீரர்கள் குறித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி பிரதமர் பேசியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தொடர் சர்ச்சையை கிளப்பும் பிரதமர் மோடி:

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி மீது தொடர் புகார் எழுந்து வருகிறது. வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், பாதுகாப்பு படைகள் குறித்து பேசி பிரதமர் பரபரப்பை கிளப்பியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், எல்லை பாதுகாப்பு குறித்து பேசிய அவர், "ஒரு தோட்டாவுக்கு பதிலடியாக பத்து தோட்டாக்களை சுடுமாறு நம் ராணுவ வீரர்களிடம் கூறியுள்ளோம்" என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி பிரதமர் பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

தேர்தல் விதிகளை மீறினாரா?

தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசிய பிரதமர், "இது சட்டத்திற்கு புறம்பானது. அரசியலமைப்பிற்கு எதிரானது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள ஓபிசி சமூகத்தினருக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது. அரசியல் சாசனத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கர், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்.

ஆனால், காங்கிரஸ் அதை பின்வாசல் வழியாக அளித்து முதுகில் குத்தியது. ஆனால், பாஜக அரசு 80 கோடி மக்களுக்கு மத பாகுபாடு இன்றி இலவச ரேஷன் வழங்கியது. ஒரு முஸ்லீம் என்பதற்காக ஒருவருக்கு இலவச ரேஷன் கிடைப்பதில்லை என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாக சதி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி, வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. பல ஆண்டுகளாக, பாதுகாப்பு படைகளுக்கான 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.

ஆனால், நாங்கள் அதை செயல்படுத்தினோம். முஸ்லிம் வாக்கு வங்கிக்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜகவுக்கு நாட்டை விட பெரிது எதுவும் இல்லை. காங்கிரசுக்கு குடும்பமே முக்கியம்" என்றார்.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 6 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. நாளை 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget