மேலும் அறிய

FM Nirmala Sitharaman:கடன் ரத்து செய்யவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன்...பொய்,பொய் என கத்திய தயாநிதி மாறன்...

பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் ரத்து செய்யப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்ட தொடரில் பல சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிராயன் கேள்வி:

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிராயன் மக்களவையில் பேசினார். அப்போது, மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாயை ரத்து செய்துள்ளது. ஆனால், வெறும் 0.82 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். 

பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் மத்திய அரசு, கடன் பெற்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கடன்களை ரத்து செய்யும் என்ற கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். 

எனவே, என்னுடைய ஒரே ஒரு கேள்வி, கடன் பெற்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு கடன்களை ரத்து செய்ய முன்வருமா என அறிய விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்:

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரிய நிறுவனங்களுக்கு கடன்களை ரத்து செய்யவில்லை என தெரிவித்தார்.

அதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பொய்.. பொய்... என தெரிவித்தார். 

அதற்கு, அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொய் என்பது பாராளுமன்ற விதிகளுக்கு புறம்பான வார்த்தை எனத் தெரிவித்தார்.

பின்னர், பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், ரைட் ஆஃப் என்பது வேறு, ரத்து செய்வது என்பது வேறு, இங்கு யாருக்கும் ரைட் ஆஃப் செய்யவில்லை எனத் தெரிவித்தார். ரைட் ஆஃப் செய்யப்பட்டவர்களின் ஆதாரமான பத்திரங்களை கொண்டு, வசூல் செய்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 

 

மேலும், கல்வி கடன் தொடர்பாக கூறும் போது, இவங்க பணத்தை, எடுத்து கொடுத்தது போன்று உள்நோக்கத்துடன் பேசுவது சரியில்லை என தெரிவித்தார்.

கல்விக்கடனை ரத்து செய்வது தொடர்பாக பரிந்துரை வைக்கலாம், ஆனால், அந்த பணத்தை எடுத்து மாற்றி கொடுத்ததாக கூறுவது உள்நோக்கத்துடன் பேசுவது போன்றதாகும் என தெரிவித்தார்.

Also Read: Kerala: கேரளா: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்..!

Also Read:இனி டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.. - நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget