மேலும் அறிய

Pakistan Drones : பரபர பதற்றம்.. எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்...பதிலடி கொடுத்த விரட்டிய இந்திய ராணுவம்..

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து 191 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கசோவால் பகுதியில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு, இந்திய எல்லை பகுதிக்குள் வந்த ஆளில்லா விமானம் மீது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அது பாகிஸ்தானுக்குத் திரும்பி சென்றது. பாதுகாப்பு படை வீரர்கள், ட்ரோனை நோக்கி குறைந்தது 96 முறை சுட்டனர்.

அதன் மீது ஐந்து குண்டுகளை வீசினர். அந்த ஆளில்லா விமானம் எங்கே சென்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபடுவது மட்டும் இன்றி ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அதை சுட்டு வீழ்த்த இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ட்ரோன்களின் வருகையை முன்கூட்டியே கண்டறிந்து செயலிழக்க செய்யும், ஜாமர் கருவி மற்றும் அதை சுட்டு வீழ்த்த துப்பாக்கிகளுடன் அடங்கிய நவீன கருவிகளை எல்லையில் நிறுவி உள்ளது.

 

இங்கு, வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து 191 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

இதில், 171 ட்ரோன்கள் பஞ்சாப் பகுதிக்குள்ளும், 20 ட்ரோன்கள் ஜம்மு பகுதியிலும் நுழைந்திருக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை இந்த ட்ரோன்கள் மூலமாகதான் கடத்தப்படுகின்றன.

இந்த கடத்தலின் மூலம் வரும் பணம், பயங்கரவாத நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அத்துமீறல்களை தடுக்க, இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 'குவாட்காப்டர் ஜாமர்' எனப்படும் ட்ரோன்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவியை ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தி உள்ளது. 

சமீப காலமாகவே, ட்ரோன் வாயிலாக நடத்தப்படும் பயங்கரவாதி செயல்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்தியாவில் மட்டும் இன்றி, உலகம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளது.

சமீபத்தில், கிழக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்ப்பு போராளிகளால் நடத்தப்படும் ராணுவ தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், எந்த வித உயிர்சேதமும் நிகழவில்லை என்றும் பொருள்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget