மேலும் அறிய

Pahalgam Attack: ’’உன்னை கொல்லல; போய் மோடிகிட்ட சொல்லு!’’- கணவனைக் கொன்று மனைவியிடம் சொன்ன பஹல்காம் தீவிரவாதி!

Pahalgam Terror Attack: அவர்கள் ராணுவ உடை எதையும் அணியவில்லை. ஆண்களையே குறிவைத்துக் கொலை செய்தனர். குறிப்பாக இந்துக்களைக் குறிவைத்து சுட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மனைவி கண் முன்னாலேயே ஏராளமான கணவன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

28 பேர் பலியான சோகம்

கர்நாடக மாநிலம், சிவமோகா பகுதியைச் சேர்ந்த தம்பதி மஞ்சுநாத்- பல்லவி. இவர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தங்களின் மகன் அபிஜேயாவுடன் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில், 28 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். 

அங்கு நடந்த சம்பவம் குறித்து பல்லவி, கன்னட ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் பல்லவி கூறியிருப்பதாவது:

’’நாங்கள் மூவரும் பஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைப் போலவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக புதுமணத் தம்பதியினர் அங்கு இருந்தனர். நாங்கள் பஹல்காமில் இருந்தோம். அப்போது என் கண் முன்னாலேயே  என் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னால் அதற்கு எதிர்வினை ஆற்றவோ, அழவோகூட முடியவில்லை.

உன்னைக் கொல்ல மாட்டேன். போ.. போய் மோடியிடம் சொல்

அங்கு 3 முதல் 4 தீவிரவாதிகள் இருந்ததைக் கண்டேன். என் கணவன் கொல்லப்பட்டதைப் பார்த்தது, அங்கிருந்த தீவிரவாதியிடம், ’’என் கணவனைக் கொன்றுவிட்டாய். என்னையும் கொன்று விடு’’ என்றேன். என் மகனும், ’’நாயே என் அப்பாவைக் கொன்றுவிட்டாய். எங்களையும் கொலை செய்துவிடு’’ என்று கதறினான்.

அப்போது அந்தத் தீவிரவாதி, ’’உன்னைக் கொல்ல மாட்டேன். போ.. போய் மோடியிடம் சொல்’’ என்று தெரிவித்தான்.   

ஆண்களையே குறிவைத்துக் கொலை

அவர்கள் ராணுவ உடை எதையும் அணியவில்லை. ஆண்களையே குறிவைத்துக் கொலை செய்தனர். குறிப்பாக இந்துக்களைக் குறிவைத்து சுட்டனர்.

என்னுடைய சொந்த ஊரான சிவமோகாவுக்கு நான் திரும்பச் செல்ல வேண்டும். ஆனால் தனியாக அல்ல. என் கணவரின் உடலுடன்தான் ஊர் திரும்புவேன். 3 பேரும் ஒன்றாக வந்தோம். ஒன்றாகத்தான் திரும்பிச் செல்லுவோம். அதிகாரிகள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்று பல்லவி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.  

மஞ்சுநாத் ரியல் எஸ்டேட் முகவரியாக இருந்தவர், அவரின் மனைவி வங்கி மேலாளராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget