padma awards 2026: மம்மூட்டிக்கு பத்ம பூஷன், ரோகித்துக்கு பத்மஸ்ரீ... பத்ம விருதுகள் வென்ற சாதனையாளர்கள் யார்? யார்?
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கவுர், நடிகர் மாதவன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக சேவகர் மய்யல் ஆனந்தனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் மம்மூட்டி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள மாநிலத்தின் மறைந்த முதலமைச்சர் அச்சுதானந்தன், மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கவுர், நடிகர் மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, திருவாரூரைச் சேர்ந்த மிருதங்கக் வித்வானுகு பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்பதி கலியப்ப கவுண்டருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியைச் சேர்ந்த ‘குறும்பா’ ஓவியர் ஆர்.கிருஷ்ணன், தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவ விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்ம விருதுகள். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதாக பத்ம விபூஷண், மூன்றாவது உயரிய விருதாக பத்ம பூஷண் விருதும், நான்காவது உயரிய விருதாக பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகின்றன. பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.























