மேலும் அறிய

இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்யார்தி. இவர் குழந்தைகள் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் குழந்தைகள் உரிமைகளுக்கான ஓர் விழிப்புணர்வு இயக்கமாக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021ம் ஆண்டு வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.  நாட்டிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 593 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகளும், குஜராத்தில் 333 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருந்தன. ஊரடங்கினால் மூடப்பட்டு நஷ்டத்தில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்த ஊதியத்திற்கு குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தும் அபாயம் இருந்த காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

தேசிய குற்றப்பதிவு ஆவண புள்ளிவிவரப்படி, 2019ம் ஆண்டு மொத்தம் 6 ஆயிரத்து 616 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். இந்த குழந்தைகள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்து மூலமாக கடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் காலங்கள் வரையில் குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் பயணிப்பது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் காலங்கள் இடையே மட்டும் கடத்தப்பட்ட 400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 100 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்கின்றனர் என்றும், அதனால் இடைநிற்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்ளுக்கு எதிரான முகாம் ஆய்வின்படி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதுபோன்று குழந்தைகளை சட்டவிரோதமாக தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget