மேலும் அறிய

இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்யார்தி. இவர் குழந்தைகள் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் குழந்தைகள் உரிமைகளுக்கான ஓர் விழிப்புணர்வு இயக்கமாக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021ம் ஆண்டு வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.  நாட்டிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 593 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகளும், குஜராத்தில் 333 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருந்தன. ஊரடங்கினால் மூடப்பட்டு நஷ்டத்தில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்த ஊதியத்திற்கு குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தும் அபாயம் இருந்த காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

தேசிய குற்றப்பதிவு ஆவண புள்ளிவிவரப்படி, 2019ம் ஆண்டு மொத்தம் 6 ஆயிரத்து 616 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். இந்த குழந்தைகள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்து மூலமாக கடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் காலங்கள் வரையில் குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் பயணிப்பது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் காலங்கள் இடையே மட்டும் கடத்தப்பட்ட 400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 100 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்கின்றனர் என்றும், அதனால் இடைநிற்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்ளுக்கு எதிரான முகாம் ஆய்வின்படி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதுபோன்று குழந்தைகளை சட்டவிரோதமாக தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget