மேலும் அறிய

இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்யார்தி. இவர் குழந்தைகள் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் குழந்தைகள் உரிமைகளுக்கான ஓர் விழிப்புணர்வு இயக்கமாக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021ம் ஆண்டு வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.  நாட்டிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 593 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகளும், குஜராத்தில் 333 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருந்தன. ஊரடங்கினால் மூடப்பட்டு நஷ்டத்தில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்த ஊதியத்திற்கு குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தும் அபாயம் இருந்த காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

தேசிய குற்றப்பதிவு ஆவண புள்ளிவிவரப்படி, 2019ம் ஆண்டு மொத்தம் 6 ஆயிரத்து 616 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். இந்த குழந்தைகள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்து மூலமாக கடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் காலங்கள் வரையில் குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் பயணிப்பது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் காலங்கள் இடையே மட்டும் கடத்தப்பட்ட 400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 100 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்கின்றனர் என்றும், அதனால் இடைநிற்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை தொழிலாளர்ளுக்கு எதிரான முகாம் ஆய்வின்படி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதுபோன்று குழந்தைகளை சட்டவிரோதமாக தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget