மேலும் அறிய

எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி சந்திப்பு!’ - தேர்தல் 2024 ஆண்டுக்கான தயாரிப்பா?

கொரோனாவுக்குப் பிறகான தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதாவின் மத்திய மாநில எதிர்கட்சித் தலைவர்கள் நாளை டெல்லியில் சந்திக்கவுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ்,சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பதினைந்து முக்கியக் கட்சிகளை அடங்கிய கூட்டம் நாளை ராஷ்டிர மஞ்ச் என்கிற பெயரில் சந்திக்க உள்ளார்கள். கொரோனாவுக்குப் பிறகான தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக டெல்லி விரைந்துள்ளார்.

எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி சந்திப்பு!’ - தேர்தல் 2024 ஆண்டுக்கான தயாரிப்பா? 

அண்மையில் தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார். கிஷோர் மேற்கு வங்காளம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறையே திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற களவேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடையேயான கூட்டணியை எதிர்த்தும் சிவசேனா விரைந்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று கோரியும் அண்மையில் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அதே சமயம் உத்தவ் தாக்கரே அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 


எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி சந்திப்பு!’ - தேர்தல் 2024 ஆண்டுக்கான தயாரிப்பா?

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிப்பிளவா என அனைவரும் புருவம் உயர்த்திய நிலையில் அதற்கு பதிலளித்திருந்த உத்தவ் தாக்கரே, ‘அரசியல் கூட்டணி இல்லை என்பதற்காக பாரதிய ஜனதாவுடனான உறவை சிவசேனா முறித்துக்கொள்ளாது’ என பதில் அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், ‘காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி தனது ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும்.அதோடு மட்டுமல்லாமல் வரவிருக்கும் லோக்சபா தேர்தலையும் ஒன்றாக எதிர்கொள்ளும்’ எனக் கூறியிருந்தார். இதற்கிடையேதான் பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஒருமுறை சரத் பவாரைச் சந்தித்துள்ளார். ’மிஷன் 2024’ என்னும் 2024 லோக்சபா தேர்தலுக்கான முன் தயாரிப்புதான் இந்தச் சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்று அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறிவரும் சரத்பவார் இன்று தனது டெல்லி இல்லத்துக்கு விரைகிறார். அங்கே 23 ஜுன் வரை இருக்கும் அவர் எதிர்கட்சித் தலைவர்களைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகச் சந்திக்க உள்ளார் எனத் தெரிகிறது. 

2024 தேர்தலில் மோடி அரசை எதிர்கொள்வதற்காக மாநிலக் கட்சிகள் வலுவான கூட்டணியை உருவாக்கிவருவதற்கான அறிகுறி தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா எனப் பல மாநிலங்களில் தென்படுகிறது. சிறுவணிகங்களுக்கான கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை மத்திய அரசை நீட்டிக்கக் கோருவது தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியது, மத்திய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ள மாநில அரசுகள் கூட்டணியாக இயங்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது,  மாநிலங்களுடன் சண்டை பிடிக்காத அவர்களைத் துன்புறுத்தாத மத்திய அரசை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்தது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் அண்மையில் நிகழ்ந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் மீட்டிங்கில் மாநிலங்களுக்கான பங்குகளில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டியது. இப்படி அடுக்கடுக்கான அரசியல் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையிலான இந்த இழுபறி ஆட்டத்தை வெளிப்படையாக வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. 

Also Read: முதலமைச்சர்கள் Vs பிரதமர் மோடி : உருவாகிறதா மாநில அரசுகள் கூடும் மூன்றாவது அணி?

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget