மேலும் அறிய

Gold One Nation One Rate: இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையில் தங்கம் - மத்திய அரசு திட்டம், லாபம் என்ன?

Gold One Nation One Rate: தங்கம் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

Gold One Nation One Rate: தங்கத்தை ஒரே நாடு ஒரே விலை திட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே விலை திட்டத்தில் தங்கம்:

நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைககள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு மாநில அரசுகளாலும் விதிக்கப்படும் வெவ்வேறு வரிகள் மட்டுமின்றி, தங்கம் மற்றும் வெள்ளி நகை விலையில் பல காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.  இதன் காரணமாக, இந்த உலோகங்களின் விலையும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஆனால், இப்போது நாட்டில் பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.

'ஒரே நாடு, ஒரே விலை' கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு நாட்டின் எந்த பகுதியில் தங்கம் வாங்கினாலும் ஒரே விலையாக தான் கிடைக்கும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்க வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகளுக்கும் தொழில் எளிதாகிவிடும். நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகைக்கடைகளும் இதை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சிலும் ஆதரவு:

தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ள,  'ஒரே நாடு ஒரே விலை' கொள்கைக்கு ரத்தினம் மற்றும் நகை கவுன்சிலும் (ஜிஜேசி) ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தங்கத்தின் விலை ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதே இதன் கொள்கையின் நோக்கமாகும். 2024 செப்டம்பரில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, இந்தக் கொள்கையை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள,  தங்கத் தொழில்துறையினர் புதிய திட்டங்களையும் வகுக்க தொடங்கியுள்ளனர்.

புதிய திட்டத்தால் என்ன மாற்றம் வரும்?

புதிய திட்டத்தால் நாடு முழுவதும் தங்கத்தின் விலையை சமன் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. இந்தக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, நீங்கள் டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்தாலும் அல்லது சிறிய நகரங்களில் தங்கம் வாங்கினாலும் விலை ஒரே மாதிரியாக இருக்கும்.  இந்தக் கொள்கையின்படி, தங்கத்திற்கு எல்லா இடங்களிலும் ஒரே விலையை நிர்ணயிக்கும் அமைப்பை அரசாங்கம் உருவாக்கும். அந்த அமைப்பின் முடிவுகளை நகை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும்.

விலை குறையலாம், நகைக்கடைகளும் கட்டுப்படுத்தப்படும்..!

”ஒரே நாடு ஒரே விலை” கொள்கையை அமல்படுத்தினால் சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். தங்கத்தின் விலையில் உள்ள வித்தியாசத்தால், அதன் விலையும் குறையலாம். இது தவிர, சில சமயங்களில் தன்னிச்சையாக தங்கம் விற்பனை செய்யும் நகைக்கடைக்காரர்களும் கட்டுப்படுத்தப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சென்னையில் சவரனுக்கு ரூ.54000-க்கும் அதிகமாக உள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget