மேலும் அறிய

முதல் மனைவி முன்னிலையில் திருநங்கையுடன் திடீர் திருமணம்.. ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் அதிசயம்..!

ஒடிசா மாநிலத்தில் 32 வயதான நபர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் 32 வயதான நபர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மனைவி முன்னிலையில் திருநங்கையுடன் திடீர் திருமணம்.. ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் அதிசயம்..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான பஹிர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் தனது 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஹிருக்கு, சங்கீதா என்ற திருநங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. 

இதையடுத்து, பஹிர் தனது மனைவிக்கு தெரியாமல் சங்கீதா என்ற திருநங்கையுடன் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பஹிர் மனைவிக்கு தெரியவந்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தன் தலைவிதி இதுதான் என்று தனது கணவனுக்கும் திருநங்கைக்கும் திருமணம் செய்துவைத்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழவும் அனுமதித்தார்.

செபகாரி கின்னர மகாசங்கத் தலைவர் காமினி என்பவரால், நார்லாவில் உள்ள ஒரு கோயிலில் பல திருநங்கைகள் முன்னிலையில் முழு சடங்குகளுடன் நடந்த 'திருமணம்'  ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து காமினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த திருமணத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறோம். இது இரு காதலர்களின் விருப்பத்தாலும், மனைவியின் சம்மதத்தாலும் நடைப்பெற்ற திருமணம்” என்று தெரிவித்தார். 

இந்து மதத்தில் முதல் திருமணம் சட்டப்பூர்வமாக பிரிந்தால் மட்டும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். இல்லையெனில் அந்த திருமணம் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அந்த நபரின் மனைவியோ அல்லது வேறு எந்த தரப்பினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, நர்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதர் மெஹர் கூறுகையில், திருமணம் தொடர்பாக மூன்றாவது நபர் புகார் அளித்தால், அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், நாங்கள் மூவரும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த நபரின் முதல் மனைவி தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget