மேலும் அறிய

Twin Tower noida : 3,700 கிலோ வெடிபொருட்கள் தயார்! இடிக்கவே ரூ20 கோடி செலவு - இன்று தகர்க்கப்படும் இரட்டை கோபுரம்

டெல்லி அருகே நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்க இருக்கின்றனர்.

டெல்லி அருகே நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்க இருக்கின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் 2.30 மணிக்கு டெட்டனேட்டருடன் இணைத்து இரட்டை கட்டடம் தகர்க்கப்படுகிறது. 

விதிமீறி 32 மாடியுடன் 328அடி உயரத்தில் அபெக்ஸ் மற்றும் 31 மாடியுடன் 318 அடி உயரத்தில் சியான் கட்டடம் கட்டப்பட்டதால் இன்று இடிக்கப்படுகிறது.  இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்க சுமார் 3, 700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது. கட்டடத்தின் தூண்களில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டநிலையில் எடிஃபைஸ் பொறியியல் நிறுவனம் கட்டடத்தை இடிக்கிறது. 

கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லாரி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

கட்டட இடிப்பின்போது சுமார் 3.கி.மீ தொலைவிற்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை நிறுத்திவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 5000 குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடம் இடிக்கப்பட்டதும் அதிக தூசி கிளம்பும் என்பதால் விமான போக்குவரத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கட்டட இடிப்பு பணிகளுக்காக ரூ. 20 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் 9 நொடிகளில் கட்டடங்கள் இடிந்து விழ இருக்கிறது. 

கட்டடத்தின் வழக்கு விவரம் : 

உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள்  இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்,  40 மாடிகளை உடைய, 'எமரால்டு கோர்ட்' என்ற  இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது.  இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது. 

அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூப்பர்டெக் நிறுவனம். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட  இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, 'எடிபைஸ் இன்ஜினியரிங்' எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.  இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன்  காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. 

இதனை அடுத்து ஹரியானா மாநிலாத்தில் இருந்து 3,500 கிலோ வெடி மருந்து கொண்டுவரப்பட்டு இரட்டை கோபுர கட்டிடத்தில் 9,400 துளைகளில் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்து இடிக்க திட்டமிடப்பட்டு, வெடி மருந்துகளை 15 நாட்களுக்குள் கட்டிடத்தில் நிரப்பி விட்டனர். 

இடிக்கப்படும் நேரம் : 

கட்டிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் - எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராமம் - (இன்று) ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர்கள், அதே நாளில் மாலை 4 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிக்கும்போது இரு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அப்பகுதியில் அனுமதிக்கப்படாது. மீட்பு பணிகளின் போது, நொய்டா ஆணையம் அவர்களுக்கு பார்க்கிங் இடத்தை வழங்கும். இரட்டைக் கோபுரத்திற்கு அருகே உள்ள நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை, இடிக்கபோகும் தினம் அன்று பிற்பகல் 2:15 முதல் 2.45 வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைந்த கையோடு செங்கோட்டையன் அலுவலகத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! அலறும் அதிமுக
தவெகவில் இணைந்த கையோடு செங்கோட்டையன் அலுவலகத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த கையோடு செங்கோட்டையன் அலுவலகத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! அலறும் அதிமுக
தவெகவில் இணைந்த கையோடு செங்கோட்டையன் அலுவலகத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
HOLIDAY: கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
Cyclone Ditwah; நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Embed widget