மேலும் அறிய

இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையா? அமெரிக்காவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தடாலடி பதில்..!

"குடிமக்களுக்கு வீடு, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாம் முழுநிறைவை அடைந்து வருகிறோம்"

நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை பல மனித உரிமை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக மேற்கத்திய நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்களும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. 

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் என்ற அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இந்தியாவில் அதிகம் நடப்பது தொடர்பாக  மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை கடுமையாக சாடி பேசினார். 

"உலகில் இஸ்லாமிய மக்கள்தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதால், அவர்கள் அபரிமிதமாக வளர்வது மட்டுமின்றி, அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு,  தொழில் செய்து வருகின்றனர்" என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

பாகிஸ்தானை மேற்கோள் காட்டி பேசிய அவர், "சிறுபான்மையினரை சமமாக நடத்துவதாக உறுதியளித்த இஸ்லாமிய நாடாக அது உருவாக்கப்பட்டது, இருப்பினும் அங்கு சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மை சமூகத்துடன் உடன்படாத பல முஸ்லீம் பிரிவுகள் கூட அழிக்கப்பட்டு எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் 1947 முதல் எண்ணிக்கையில் மட்டுமே வளர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் தொழில்களை வசதியாக செய்து வருகின்றனர் . அவர்கள் உதவித்தொகை பெறுகிறார்கள். உலகில் முஸ்லிம் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.

இந்தியாவிற்கு முதலீட்டாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதில் பதில் இருக்கிறது. தரையில் நடப்பதைக் கூட பார்க்காதவர்கள் சொல்வதைக் கேட்பதை விட, தயவுசெய்து நீங்களே வந்து யதார்த்தத்தைப் பாருங்கள் என்று நான் கூறுவேன்" என்றார்.

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவது குறித்து பேசிய அவர், "அதற்கு இந்தியர்களின் ஆர்வமுள்ள தன்மையே காரணம். துன்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள் இருந்தபோதிலும், நாங்கள் கொரோனாவா ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்தோம். இலக்கு அணுகுமுறை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு ஆதரவை வழங்கியது.

விநியோகச் சங்கிலி சீர்குலைவால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் விவேகமாகியுள்ளன. பல்வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியா மிக முக்கியமான பங்கிற்கு தயாராக உள்ளது. திறமையான இளைஞர்கள் மற்றும் பெரிய உள்நாட்டு சந்தை காரணமாக இந்தியா கவர்ச்சிகரமானதாக உள்ளது.

இன்று, குடிமக்களுக்கு வீடு, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாம் முழுநிறைவை அடைந்து வருகிறோம். அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் மற்றும் பலன்கள் நேரடியாகச் சென்றடையும் வகையில் நிதிச் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Embed widget