மேலும் அறிய

இந்தூரில் வளையல் வியாபாரி மீது தாக்குதல்.. இஸ்லாமிய பெயரால் சிக்கலா? போலீசார் விசாரணை!

இந்தூரில் வளையல் வியாபாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் வளையல் வியாபாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வளையல் வியாபாரம் செய்யும் நபரை திடீரென ஒரு கும்பல் சுற்றிவளைத்துள்ளது. அந்த கும்பல் அவரிடம் பெயர் கேட்டுள்ளது. அந்த நபர் ஓர் இஸ்லாமிய பெயரைச் சொல்ல அவ்வளவுதான், அந்தக் கும்பல் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளது. கருணையே இல்லாமல் அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காண்போரை கலங்கச் செய்யும்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள்ளேயே தாக்கப்பட்டேன். எவ்வளவோ கெஞ்சியும் என்னை அவர்கள் விடவில்லை. நான் தொழிலுக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அத்துடன் நான் வைத்திருந்த வளையல்களையும் அவர்கள் உடைத்துவிட்டனர் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்தூர் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் பாக்ரி கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.

வீடியோவில் இருந்த காட்சிகள்:

இணையத்தில் வெளியான அந்த அதிர்ச்சி வீடியோவில் இந்தூரின் பான்கங்கா வீதியில் வளையல்களை விற்றுக் கொண்டு வருகிறார் வியாபாரி ஒருவர். அப்போது ஒருசிலர் அந்த நபரை சுற்றிவளைத்து அவருடைய பெயரைக் கேட்கின்றனர். அந்த நபர் தனது பெயர் தஸ்லீம் எனக் கூறுகிறார். உடனே அந்த கும்பல் அவரைத் தாக்க ஆரம்பிக்கிறது. கும்பலில் உள்ள ஒருவர் இந்த ஆளிடம் இருந்து என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார். பின்னர் அவரே வாருங்கள் இவரைத் தாக்குங்கள் எனக் கூறுகிறார். 4 பேர் சூழ்ந்து தாக்குகின்றனர். தஸ்லீமால் தப்பிக்க முடியவில்லை.
இந்தக் காட்சி கடும் அதிர்ச்சியைத் தருகிறது.


இந்தூரில் வளையல் வியாபாரி மீது தாக்குதல்.. இஸ்லாமிய பெயரால் சிக்கலா? போலீசார் விசாரணை!

இதற்கிடையில் மாவட்ட எஸ்.பி. முன்வைத்துள்ள கோரிக்கையில், நாங்கள் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மக்கள் சமூகவலைதளங்களில் வரும் மத ரீதியான வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். சமூகவலைதப் பதிவுகளை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்ட மிஷ்ரா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் இந்துப் பெயரைக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வளையல் விற்றுவந்துள்ளார். அவரிடம் இரண்டு ஆதார் அட்டைகள் இருந்துள்ளது. அவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். விசாரனை நடக்கிறது என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget