மேலும் அறிய

கே.வி பள்ளியில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யாத எம்பிகள் மீதான கோபம்தான் தோல்விக்குக் காரணம் – பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி!

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் என அமைச்சரவைக்குழு தெரிவித்திருந்தது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு எம்பிகள் அதிகளவில் சிபாரிசு செய்ய முடியாத சூழலில் ஏற்பட்ட கோபம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெறவில்லை. இந்தாண்டும் அவ்வாறு இருக்குமோ? என்பதற்கு ஏற்றால் போல் தான் சூழல் நிலவியது . இருந்தப்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியையும் முறையாகப் பின்பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அமைச்சரவைக்குழு அறிவித்தது. அதன்படி, கடந்த 29 ஆம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.  கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் இந்தியா முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படி சமாளிப்பது? எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மக்களின் அடிப்படை விஷயங்கள் குறித்தும் இந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர். அதிலும் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களைக்கவரும் வகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்நத முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருந்தப்போதும் எதிர்க்கட்சிகள் காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் கொலை செய்ததில் ஏற்பட்ட வன்முறை குறித்தெல்லாம் வலுவான கண்டங்களை எழுப்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • கே.வி பள்ளியில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யாத எம்பிகள் மீதான கோபம்தான் தோல்விக்குக் காரணம் – பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி!

இந்நிலையில் தான் நேற்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுசில்குமார் மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் எம்பிகள் தோல்வியைச்சந்தித்தனர் என்பதற்கானக் காரணம் குறித்து பேசியிருந்தார். அப்போது, “இந்தியாவில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஒவ்வொரும் எம்பிக்கும் 10 மாணவர்களை மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்சி பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்களை சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யலாம். மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு படி எம்பிகளுக்கு மட்டும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 7880 மாணவர்களை சேர்ப்பதற்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது குழந்தைகளை  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யும் படி கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டுமே சிபாரிசு செய்ய முடியும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கோபமடைகின்றனர். இதனால் அவர்கள் தேர்தலில் தோல்வியை அடைவதற்கு இதுவும் மிகப்பெரிய காரணமாக அமைகிறது” என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார். இதெல்லாம் ஒரு காரணமா? என்றும் பலர் பாஜக மூத்த தலைவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget