மேலும் அறிய

கே.வி பள்ளியில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யாத எம்பிகள் மீதான கோபம்தான் தோல்விக்குக் காரணம் – பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி!

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் என அமைச்சரவைக்குழு தெரிவித்திருந்தது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு எம்பிகள் அதிகளவில் சிபாரிசு செய்ய முடியாத சூழலில் ஏற்பட்ட கோபம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெறவில்லை. இந்தாண்டும் அவ்வாறு இருக்குமோ? என்பதற்கு ஏற்றால் போல் தான் சூழல் நிலவியது . இருந்தப்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியையும் முறையாகப் பின்பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அமைச்சரவைக்குழு அறிவித்தது. அதன்படி, கடந்த 29 ஆம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.  கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் இந்தியா முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படி சமாளிப்பது? எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மக்களின் அடிப்படை விஷயங்கள் குறித்தும் இந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர். அதிலும் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களைக்கவரும் வகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்நத முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருந்தப்போதும் எதிர்க்கட்சிகள் காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் கொலை செய்ததில் ஏற்பட்ட வன்முறை குறித்தெல்லாம் வலுவான கண்டங்களை எழுப்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • கே.வி பள்ளியில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யாத எம்பிகள் மீதான கோபம்தான் தோல்விக்குக் காரணம் – பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி!

இந்நிலையில் தான் நேற்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுசில்குமார் மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் எம்பிகள் தோல்வியைச்சந்தித்தனர் என்பதற்கானக் காரணம் குறித்து பேசியிருந்தார். அப்போது, “இந்தியாவில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஒவ்வொரும் எம்பிக்கும் 10 மாணவர்களை மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்சி பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்களை சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யலாம். மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு படி எம்பிகளுக்கு மட்டும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 7880 மாணவர்களை சேர்ப்பதற்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது குழந்தைகளை  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யும் படி கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டுமே சிபாரிசு செய்ய முடியும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கோபமடைகின்றனர். இதனால் அவர்கள் தேர்தலில் தோல்வியை அடைவதற்கு இதுவும் மிகப்பெரிய காரணமாக அமைகிறது” என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார். இதெல்லாம் ஒரு காரணமா? என்றும் பலர் பாஜக மூத்த தலைவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget