மேலும் அறிய

குழந்தை வேண்டி பாலியல் தொழிலாளிகளை பலிகொடுத்த தம்பதி: மத்தியபிரதேசத்தில் பீதி

போலி சாமியாரோ, பாலியல் தொழிலாளி ஒருவரை பலிகொடுத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் எனக்கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் க்வாலியர் அருகே குழந்தை வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளை பலிகொடுத்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து இந்த இரட்டைக் கொலை தொடர்பாக மொத்தம் ஐந்து பேரை அந்த மாநில போலீஸ் கைது செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் க்வாலியரை சேர்ந்தவர் பண்ட்டூ, இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லை.

பல சிகிச்சை செய்தும் பலனில்லை என்பதால் மம்தாவின் உறவினர் நீரஜை அணுகியுள்ளனர். நீரஜூம் யாதவ் என்கிற சாமியார் பெயரைச் சொல்லி அவரிடம் சென்றால் குழந்தை பிறக்கும் என தம்பதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.நீரஜ் சாமியாரிடம் தம்பதிகளை அழைத்துச் சென்றுள்ளார். 



குழந்தை வேண்டி பாலியல் தொழிலாளிகளை பலிகொடுத்த தம்பதி: மத்தியபிரதேசத்தில் பீதி

போலி சாமியாரோ, பாலியல் தொழிலாளி ஒருவரை பலிகொடுத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் எனக்கூறியுள்ளார். அதன் பிறகு இதற்கான திட்டங்கள் அனைத்தையும் நீரஜ் தீட்டியுள்ளார். பாலியல் தொழிலாளிகளின் மேனேஜர் ஒருவரை அனுகி விவரத்தை சொல்லி பத்தாயிரம் பணம் கொடுத்துள்ளார் நீரஜ். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த மேனேஜர் ஒரு பாலியல் தொழிலாளியை அனுப்பியுள்ளார். அவரைக் கழுத்தை நெருக்கிக் கொலை செய்த நீரஜ். பலிபூஜை செய்வதற்காக வண்டியில் வைத்து அமர்த்தி சாமியாரிடம் எடுத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் உடல் கீழே விழுந்து சிதறியுள்ளது.அதனால் பயந்துபோன நீரஜ் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளார். 

முதல்முறை சரியாகச் செய்யவில்லை என்பதால் இரண்டாவதாக இதே போல மீண்டும் ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் நீரஜ். ஆனால் அந்தப் பாலியல் தொழிலாளி குடித்திருந்ததால் அவரை பலியிட முடியாது என மறுத்திருக்கிறார் இந்த போலி சாமியார். 

இரண்டு சம்பவங்களும் 18 மற்றும் 20 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. முதல் கொலையில் சாலையில் பிணத்தைக் கண்ட போலீசார் மேலதிக விசாரனையில் நீரஜைப் பிடித்துள்ளனர். நீரஜிடம் போலீஸ் விசாரித்ததில் மேலும் ஒரு பாலியல் தொழிலாளியைக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நீரஜ் உட்பட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை மத்தியபிரதேசக் காவல்துறை கைது செய்துள்ளது. 

உடலுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்டனரா? 

பாலியல் தொழிலாளிகள் இருவருமே கொலை செய்யப்படுவதற்கு முன்பு நீரஜுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். பலி கொடுக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் உடலுறவில் ஈடுபடவேண்டும் என சாமியார் சொன்னதால் தான் இவ்வாறு செய்ததாக நீரஜ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். பாலியல் தொழிலாளியின் உடலில் இருந்த தடயங்களைக் கொண்டுதான் அவர்கள் நீரஜை குற்றவாளி எனக் கண்டுபிடித்துள்ளனர். குழந்தை பேறுக்காக மாந்திரீகத்தை நம்பி பாலியல் தொழிலாளர்கள் பலிகொடுக்கப்பட்டிருப்பது மத்தியபிரதேசத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget