மேலும் அறிய

Maharashtra CM: நாளை பதவியேற்பு! இன்னும் முதலமைச்சர் பதவிக்கு சண்டை - பரபரப்பில் மகாராஷ்ட்ரா

மகாராஷ்ட்ராவில் நாளை புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், முதலமைச்சர் யார்? என்று இன்னும் அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா. இந்த மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார்  தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி:

இவர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. மகாராஷ்ட்ராவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பா.ஜ.க. 132 தொகுதிகளில் வெற்றி பெற்று பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 தொகுதிகளை கைப்பற்றியது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளை கைப்பற்றியது.

யார் முதலமைச்சர்?

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான தொகுதிகளை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனாலும், ஆட்சி அமைப்பதற்கு தனிப்பெரும்பான்மையான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றவில்லை. மகாராஷ்ட்ராவில் புதிய அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தற்போது வரை முதலமைச்சர் யார்? என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டே, ஏற்கனவே முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல, மறுபுறம் அஜித்பவாரும் முதலமைச்சர் நாற்காலிக்கு மல்லு கட்டி வருகிறார். ஷிண்டே தன்வசம் 57 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளதால் அவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அஜித்பவாரும் தன் வசம் 41 எம்.எல்.ஏ,க்கள் இருப்பதால் அவரும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.

இன்று அறிவிப்பு:

இந்த பரபரப்பான சூழலில், நேற்று தேவேந்திர பட்னாவிஸ் – ஏக்நாத் ஷிண்டே இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் முதலமைச்சர் பதவி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் சுமூகமான ஒரு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ராவின் முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிப்பதற்காக மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது அறிவிக்கப்பட உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் – ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவர் இடையே ஒருவரே முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

ஷிண்டே - அஜித்பவார் திட்டம்:

அதேசமயம், 132 எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் வைத்துள்ள பா.ஜ.க. முதலமைச்சர் தேர்வில் புதிய ட்விஸ்டை உருவாக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், சிவசேனாவை முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஏக்நாத் ஷிண்டே இந்த முறையும் முதலமைச்சர் பதவியை அடைய விரும்புவார். அதனால், 57 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவிக்காக பா.ஜ.க.வுக்கு ஏதேனும் நெருக்கடி அளிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரிடம் இருந்தும் முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிக்க அஜித் பவாரும் மறுமுனையில் முயற்சித்து வருகிறார். முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் துணை முதலமைச்சராக அவர் தேர்வாக வாய்ப்புகள் அதிகளவு இருக்கிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்..  திருமாவளவன் பேச்சு
கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்.. திருமாவளவன் பேச்சு
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
33 ஆண்டு சினிமா பயணம் “சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்”.. விஜயை மறைமுகமாக தாக்கினாரா அஜித்?
33 ஆண்டு சினிமா பயணம் “சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்”.. விஜயை மறைமுகமாக தாக்கினாரா அஜித்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்..  திருமாவளவன் பேச்சு
கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்.. திருமாவளவன் பேச்சு
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
33 ஆண்டு சினிமா பயணம் “சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்”.. விஜயை மறைமுகமாக தாக்கினாரா அஜித்?
33 ஆண்டு சினிமா பயணம் “சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்”.. விஜயை மறைமுகமாக தாக்கினாரா அஜித்?
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
Embed widget