மேலும் அறிய

MS Dhoni's Ranchi farm : தோனியின் பண்ணைக்குச் சென்ற 2000 கருங்கோழிகள்!! கோழி வளர்ப்பில் அடுத்த திட்டம்!!

கடக்நாத் கோழியின் முட்டை மற்றும் இறைச்சி மற்ற கோழி இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகவலின் பேரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் ஒன்று ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பண்ணைக்கு புரதச் சத்து நிறைந்த 'கடக்நாத்' இனத்தைச் சேர்ந்த 2,000 கருங்கோழிக்குஞ்சுகளை   அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசம் ஜபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு கடக்நாத் கோழி இறைச்சி, சத்தீஸ்கர் மாநிலத்துடனான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2018 இல் புவியியல் குறியீட்டை (ஜிஐ) பெற்றது. இதன் காரணமாக இந்த வகை கோழியின் வணிக மதிப்பு அடிக்கடி உயர்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றன.

இந்த கடக்நாத் கோழியின் முட்டை மற்றும் இறைச்சி மற்ற கோழி இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

உள்ளூர் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து தோனி, ஆர்டர் செய்த 2,000 'கடக்நாத்' கோழி குஞ்சுகளை தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டதாக ஜாபுவா கலெக்டர் சோமேஷ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.


MS Dhoni's Ranchi farm : தோனியின் பண்ணைக்குச் சென்ற 2000 கருங்கோழிகள்!! கோழி வளர்ப்பில் அடுத்த திட்டம்!!

"தோனி போன்ற பிரபலமான ஆட்கள் கடக்நாத் கோழி வகைகளில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்த குஞ்சுகளை யார் வேண்டுமானாலும் ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யலாம், இது மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு (இந்த கோழியை வளர்ப்பது) பயனளிக்கும்" என்று மிஸ்ரா கூறினார்.

ஜாபுவாவின் க்ரிஷி விக்யான் கேந்திரா தலைவர் டாக்டர் ஐ எஸ் தோமர் கூறுகையில், தோனி சில காலத்திற்கு முன்பு ஆர்டர் செய்தார். ஆனால் பறவைக் காய்ச்சல் வெடித்ததால் அந்த நேரத்தில் கோழி குஞ்சுகளை வழங்க முடியவில்லை.


MS Dhoni's Ranchi farm : தோனியின் பண்ணைக்குச் சென்ற 2000 கருங்கோழிகள்!! கோழி வளர்ப்பில் அடுத்த திட்டம்!!

ஜபுவாவின் ருண்டிபாடா கிராமத்தில் கடக்நாத் தயாரிப்புடன் தொடர்புடைய கூட்டுறவு அமைப்பை நடத்தி வரும் வினோத் மேதாவிடம் தோனி ஆர்டர் செய்துள்ளார். ராஞ்சிக்கு அனுப்பப்பட்ட 2,000 கடக்நாத் கோழி  குஞ்சுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரின் பண்ணை வீட்டில் குஞ்சுகளை வளர்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதால், கோழி குஞ்சுகளை உடனே அனுப்புமாறு தோனியின் மேலாளர் தன்னிடம் கூறியதாக மேதா பிடிஐயிடம் தெரிவித்தார்.

ஜாபுவாவின் பழங்குடி கலாச்சாரத்தின் அடையாளமாக தோனிக்கு ஒரு பாரம்பரிய வில் மற்றும் அம்புகளை பரிசளிப்பதாகவும் மேதா தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச அரசாங்கம் கடந்த 2018 இல் கடக்நாத் செயலியை அறிமுகப்படுத்தியது, இதனால் மக்கள் ஆன்லைன் முறையில் குஞ்சுகளை ஆர்டர் செய்யலாம் என்றும், ஒரு நாள் வயதுடைய கடக்நாத் குஞ்சுகள் கிட்டத்தட்ட ரூ. 75 ஆகும், அதே சமயம் 15 நாள் மற்றும் 28 நாள் வயதுடைய குஞ்சுகள் முறையே ரூ.90 மற்றும் ரூ.120 ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget