மேலும் அறிய

கிரிக்கெட் விளையாடிய போது சோகம்.. மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

நண்பர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடிய நிலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைமையை சரி செய்ய தண்ணீர் குடித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் இடையில் தண்ணீர் குடித்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தண்ணீர் குடித்த நிலையில் மரணம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை காலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 30 வயதான எல்ஐசி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி  மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினரின் விசாரணையில் அந்த நபர் ஜான்சியின் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசிக்கும் ரவீந்திர அஹிர்வார் என கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடிய நிலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைமையை சரி செய்ய தண்ணீர் குடித்த நிலையில் வாந்தி எடுத்து, சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேரில் பார்த்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்த சம்பவம் ஜான்சியில் உள்ள அரசு கல்லூரி (ஜிஐசி) மைதானத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு ரவீந்திர அஹிர்வார் பல வாரங்களுக்குப் பிறகு விளையாடச் சென்றார். நீண்ட  நாட்களுக்குப் பின் மீண்டும் விளையாட வந்ததால் அவர் மிகவும் உற்சாகமாகவும், விளையாடும் முன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்துள்ளார். நண்பர்களிடமும் ஜாலியாக பேசியபடியே விளையாடியுள்ளார். 

நீரிழப்பு என நினைத்த நண்பர்கள்

மேலும் காலையில் விளையாட செல்லும் முன் அதிகாலையில் எழுந்து வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் தனது தந்தையுடன் தேநீர் அருந்தியுள்ளார்.பின்னர் அவரிடம் விடைபெற்று விட்டு விளையாட சென்ற அவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியும் கவலைக்குள்ளாக்கியும் உள்ளது.

கிரிக்கெட் போட்டியின்போது பந்து வீசிய அவர் இடையில் வீரர்கள் சிறிது ஓய்வெடுப்பதற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதற்குள் அவர் சில ஓவர்கள் வீசிய நிலையில் சற்று சோர்வாக காணப்பட்டார். முதலில் அவரது சக வீரர்கள் ஆரம்பத்தில் அவர் நீரிழப்புடன் இருப்பதாக நினைத்தனர். அதனால் அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தினர். எனினும் குடித்த சிறிது நேரத்திலேயே ரவீந்திர அஹிர்வார் வாந்தி எடுக்கத் தொடங்கி மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயன்ற போது பேச்சு மூச்சின்றி கிடந்ததால் நிலைமையின் தீவிரத்தை விரைவாக உணர்ந்த சக நண்பர்கள் உடனடியாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றும் டாக்டர் சச்சின் மஹோர் கூறுகையில், ரவீந்திர அஹிர்வார் உடலை பரிசோதனை செய்தபோது ஆரம்ப அறிகுறிகள் மாரடைப்பு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும் என கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரவீந்திர அஹிர்வார் கடைசியில் அவருக்கு விருப்பமான கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - உண்மையான கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - உண்மையான கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Embed widget