மேலும் அறிய

கிரிக்கெட் விளையாடிய போது சோகம்.. மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

நண்பர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடிய நிலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைமையை சரி செய்ய தண்ணீர் குடித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் இடையில் தண்ணீர் குடித்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தண்ணீர் குடித்த நிலையில் மரணம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை காலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 30 வயதான எல்ஐசி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி  மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினரின் விசாரணையில் அந்த நபர் ஜான்சியின் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசிக்கும் ரவீந்திர அஹிர்வார் என கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடிய நிலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைமையை சரி செய்ய தண்ணீர் குடித்த நிலையில் வாந்தி எடுத்து, சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேரில் பார்த்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்த சம்பவம் ஜான்சியில் உள்ள அரசு கல்லூரி (ஜிஐசி) மைதானத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு ரவீந்திர அஹிர்வார் பல வாரங்களுக்குப் பிறகு விளையாடச் சென்றார். நீண்ட  நாட்களுக்குப் பின் மீண்டும் விளையாட வந்ததால் அவர் மிகவும் உற்சாகமாகவும், விளையாடும் முன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்துள்ளார். நண்பர்களிடமும் ஜாலியாக பேசியபடியே விளையாடியுள்ளார். 

நீரிழப்பு என நினைத்த நண்பர்கள்

மேலும் காலையில் விளையாட செல்லும் முன் அதிகாலையில் எழுந்து வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் தனது தந்தையுடன் தேநீர் அருந்தியுள்ளார்.பின்னர் அவரிடம் விடைபெற்று விட்டு விளையாட சென்ற அவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியும் கவலைக்குள்ளாக்கியும் உள்ளது.

கிரிக்கெட் போட்டியின்போது பந்து வீசிய அவர் இடையில் வீரர்கள் சிறிது ஓய்வெடுப்பதற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதற்குள் அவர் சில ஓவர்கள் வீசிய நிலையில் சற்று சோர்வாக காணப்பட்டார். முதலில் அவரது சக வீரர்கள் ஆரம்பத்தில் அவர் நீரிழப்புடன் இருப்பதாக நினைத்தனர். அதனால் அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தினர். எனினும் குடித்த சிறிது நேரத்திலேயே ரவீந்திர அஹிர்வார் வாந்தி எடுக்கத் தொடங்கி மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயன்ற போது பேச்சு மூச்சின்றி கிடந்ததால் நிலைமையின் தீவிரத்தை விரைவாக உணர்ந்த சக நண்பர்கள் உடனடியாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றும் டாக்டர் சச்சின் மஹோர் கூறுகையில், ரவீந்திர அஹிர்வார் உடலை பரிசோதனை செய்தபோது ஆரம்ப அறிகுறிகள் மாரடைப்பு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும் என கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரவீந்திர அஹிர்வார் கடைசியில் அவருக்கு விருப்பமான கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget