மேலும் அறிய

Kerala First Post Woman : தபால்துறையின் தங்கமங்கை ..! கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்..!

முஹம்மா பகுதியில் இருந்த அலுவலகத்தில் 1991ல் தான் ஓய்வு பெறும் கடைசி காலம் வரை பணியாற்றினார்

பழங்காலத்தில் கடிதங்கள், மணி ஆர்டர்கள் மற்றும் தந்திகளை எடுத்துச் செல்ல தபால்காரர்கள் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துச் செல்ல வேண்டும். அதனால் அது பெண்களுக்கு ஏற்ற வேலையாகக் கருதப்படவில்லை. ஆனால், 1950களின் பிற்பகுதியில், அப்போது 20 வயதுடைய கே.ஆர்.ஆனந்தவல்லி, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் தபால்காரர் வேலைக்கு விண்ணப்பித்தார்.

அவரது தொடக்க நாட்களில் சில மனச்சோர்வு இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து பணிபுரிந்தார், முஹம்மா பகுதியில் இருந்த அலுவலகத்தில் 1991ல் தான் ஓய்வு பெறும் கடைசி காலம் வரை பணியாற்றினார். அஞ்சல்துறையில் பல பதவிகளையும் வகித்தார். இவர் அக்டோபர் முதல் நாள் தனது 89வது வயதில் இறந்தார். தான் வாழ்ந்த மூன்று தசாப்தங்களில் அவர் தகவல்தொடர்புத்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் குழந்தையாக இருந்தபோது கேரளாவின் முதல் போஸ்ட் வுமன் அவர் என்பதை மாத்ருபூமியில் எழுதிய ஒரு கட்டுரையில் அறிந்தோம். ஆனால் ஒரு புகைப்படக் கலைஞராக நான் செய்தித்தாள்களில் எனது புகைப்படங்களை வெளியிடத் தொடர்புகொள்ளத் தொடங்கியபோதுதான் பெண் தபால்காரர் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். மெயில் டெலிவரி செய்ய அவர் சவாரி செய்த பழைய ராலே சைக்கிளில் நான் அவரைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்,” என்கிறார் ஆனந்தவல்லியின் மகன் தனராஜ்.



Kerala First Post Woman : தபால்துறையின் தங்கமங்கை ..! கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்..!

அவரது சைக்கிள் சவாரிக்கு பயன்படுத்தப்படாவிட்டாலும், இன்னும் குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. "என் தந்தை அதை சவாரி செய்தார், பின்னர் நான் அதை சவாரி செய்தேன். ஆனால், இப்போது அது பயன்படுத்தப்படவில்லை,'' என்கிறார் அவர்.

தான் தபால்காரராக இருந்த நாட்கள் குறித்து ஆனந்தவல்லி தனது பிள்ளைகளிடம் நிறைய பகிர்ந்துகொண்டதாக தனராஜ் கூறுகிறார். “அம்மாவுக்கு கேரளாவின் முக்கிய நபர்களூடன் நல்ல பரிச்சயம் இருந்தது. அந்த நாட்களில் முஹம்மா தபால்நிலையத்தில் தந்தி வ்சதிகள் இல்லை. முஹம்மாதான் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலனுடைய மனைவி சுசீலா கோபாலனின் ஊர்.அவர்தான் அங்கே முதன்முதலில் தந்தியை அறிமுகப்படுத்தினார். ஏ.கே.ஜி.யின் அறிவுரைகள் வந்ததும், என் அம்மாதான் அதை எடுத்துவிடுவார். அப்போது அவர் எவ்வளவு பதற்றமாக இருந்தார் என்பதை அவர் எங்களிடம் கூறுவார்,” என்கிறார் தனராஜ்.

உள்ளுர் தொலைக்காட்சியின் மற்றொரு செய்தி, ஆனந்தவல்லி தபால் சேவையில் சேர்ந்ததற்கு முன்னான சூழல் குறித்துப் பகிர்ந்திருந்தது. சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர் வேலையில் சேர விடாமல் தடுத்ததை அடுத்து ஆனந்தவல்லி வேலை கிடைத்த முதல் நாளே ராஜினாமா கடிதத்துடன் அலுவலகம் சென்றார். அந்தக் கடிதத்தைப் பார்த்த அலுவலக ஸ்டெனோகிராஃபர், அதைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டார். அப்படிக் கிழித்துப் போட்ட கடிதம்தான் கேரளாவுக்கான முதல் பெண் தபால்காரரைப் பெற்றுத்தந்தது என்கிறார்.

ஆனால் ஆனந்தவல்லிக்கு ஆயுர்வேத மருத்துவரான அவரது தந்தை கே.ஆர்.ராகவனின் ஆதரவு இருந்தது. வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த பிறகுதான், தபால் வேலையை எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். அவர் ஓட்டத் தொடங்கிய ராலே சைக்கிள் அவருடைய தந்தையின் பரிசு.

தபால்காரராக ஆனந்தவல்லியின் முதல் சம்பளம் ரூ.97.50. அவர் சமஸ்கிருத ஆசிரியரான வி.கே.ராஜன் என்பவரை மணந்தார். அவர்களுக்கு தன்ராஜ் மற்றும் உஷாகுமாரி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget