மேலும் அறிய

மாணவிகளை பூட்டிவைக்காதீங்க; வேணும்னா மாணவர்களை ஹாஸ்டலில் அடைத்துவைங்க: உயர்நீதிமன்றம்

பெண்கள் விடுதியில் இரவு நேரம் அவர்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அவர்களின் நலனுக்காக என்று கூறப்பட்டால் தயவு செய்து அவர்களை விடுதியில் பூட்டாதீர்கள்.

பெண்கள் விடுதியில் இரவு நேரம் அவர்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அவர்களின் நலனுக்காக என்று கூறப்பட்டால் தயவு செய்து அவர்களை விடுதியில் பூட்டாதீர்கள். மாறாக ஆண்களை விடுதியில் பூட்டிவையுங்கள். 8 மணிக்கு மேல் ஆண்களை வெளியே அனுப்பாதீர்கள். ஏனெனில் அவர்கள் தான் பிரச்சனை செய்கிறார்கள் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவிகள் விடுதியில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி இரவு 9.30 மணிக்கு மேல் மாணவிகள் உரிய காரணமின்றி வெளியே செல்ல முடியாது. மாணவிகளின் நன்மைக்காக இது செய்யப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விதிமுறையை எதிர்த்து 5 மருத்துவ மாணவிகளும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி யூனியன் நிர்வாகிகளும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "பெண்கள் விடுதிக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதால் எந்த பலனும் கிடைத்துவிடாது. மாணவிகள் மீது அவநம்பிக்கை கொண்டு எதையும் சாதிக்க முடியாது. ஆண்கள் தான் பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். அதனால் அவர்களை நீங்கள் அடைத்து வைக்கலாமே. 8 மணிக்கு மேல் ஆண்கள் வெளியில் வர டடை விதிக்கலாம். அப்படியென்றால் பெண்கள் சுதந்திரமாக உலா வர முடியும் தானே. கேரளா இன்னும் இதுபோன்ற தொன்மையான பழக்கவழக்கங்களில் இருந்து இன்னும் மீளவில்லை. பழமைவாதிகளை இது போன்ற முடிவுகளை எடுக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. 

எத்தனை காலம் தான் நாம் மாணவிகளை பூட்டிவைக்க வேண்டும். ஒருவேளை இந்த சமூகம் அதைத்தான் விரும்புகிறதா? அப்படியென்றாலும் கூட மாணவ சமுதாயம் சார்ந்த முடிவை அவர்களைவிட ரொம்ப மூத்த வயதினர் கொண்ட சமுதாயம் எடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு வயதுக்கான சமுதாயமும் ஒரு தனி தேசம் போன்றது. அதனால் மற்றொரு பருவத்தினரின் உரிமைகளை நாம் முடிவு செய்யாமல் இருப்பதே நல்லது.

2019ல் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதாவது இந்த சமூகம் இது பற்றி வெளிப்படையாக விவாதிக்க முன்வர வேண்டும். கொரோனா காலத்தில் லாக்டவுன்கள் போடப்பட்டன. வெளியே குற்றங்கள் குறைந்தன. ஆனால் குடும்ப வன்முறைகள் அதிகரித்தன. பெண்கள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலாகின. இப்போது அரசாங்கம் குறைந்தபட்சம் கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகள் 9.30 மணிக்கு மேல் வெளியில் இருந்தால் அவர்களின் நடத்தை கெட்டுவிடும் என நம்புகின்றனர். அப்படியிருக்கும் போது அரசு என்ன செய்யும். பெற்றோர்களே தங்கள் மகள்கள் அடைத்து வைத்திருப்பதை விரும்பும்போது அரசும் அதைத்தானே செய்யும்.

எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. மாணாக்கர் நலன் கருதி கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவ்வாறாக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது ஏன் மாணவிகளுக்கு மட்டுமே கெடுபிடி விதிக்க வேண்டும். மாணவர்களுக்கும் விதிக்கலாமே. இந்த பாலின பாகுபாட்டை தான் நான் கேள்வியாக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
Cong Slams MODI: ”வாய திறந்தாலே பொய்யா” உளறிய பிரதமர் மோடி? ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
சிபிஎஸ்இ எச்சரிக்கை! மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்: பெற்றோர்களே உஷார்! போலி வாக்குறுதிகள் & ஆபத்துகள்!
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
Sudarshan Chakra Mission: இந்தியாவின் அயர்ன் டோம்..சுதர்ஷன் சக்ரா மிஷன் - வான் பரப்பை காக்க கிருஷ்ணரின் ஆயுதம்
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
ஆளுநர் vs அமைச்சர் அன்பில்: அரசுப் பள்ளிகள் மீதான விவாதத்தில் வெடித்த மோதல்! கல்வி நிதி எங்கே?
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
PM Modi Speech: மோடிக்கு என்ன ஆச்சு? நேருவை புகழ்ந்த பிரதமர் - ”யார மிரட்டுறீங்க” பாக்., பதிலடி தந்த பேச்சு
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம்   - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்ட PM, CM, சுதந்திர தின கொண்டாட்டம் - 11 மணி செய்திகள்
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Embed widget