மேலும் அறிய

முன்னாள் காதலியையும் குடும்பத்தினரையும் வீடுபுகுந்து கொன்ற நபர்! உடுப்பியை அலறவிட்ட 4 கொலைகள்!

பெண்ணை கொலை செய்தது மட்டும் இன்றி அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனையும் குற்றவாளி கொலை செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவை பதறவைக்கும் கொலைகள்:

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது மட்டும் இன்றி அவரது தாய்,சகோதரி மற்றும் சகோதரரை குற்றவாளி கொலை செய்துள்ளார்.

மங்களூரு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்காக அய்னாஸ் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மீது அதே விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரவீன் அருண் சௌகுலே என்பவருக்கு பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அய்னாஸை கொலை செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் பிரவீன் அருண் சௌகுலே. அங்கு, அய்னாஸின் தாயார் ஹசீனா (47), சகோதரி அப்னான் (23), தம்பி அசீம் (21) ஆகியோரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் பிரவீன் அருண்.

ஹசீனாவின் மாமியாரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிரவீன் அருண் சௌகுலே என்ற நபர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைகளை செய்துவிட்டு உறவினர்களுடன் தங்கியிருந்த அவர் பெலகாவியில் உள்ள குடாச்சியில் வைத்து கைது செய்தோம்.

நடந்தது என்ன?

மொபைல் டவர் இருப்பிடத் தகவல், அழைப்பு தரவு பதிவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில் சந்தேக நபரைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வார இறுதியில் விடுமுறை நாளை கழிப்பதற்காக உடுப்பிக்கு மங்களூருவில் இருந்து வீடு திரும்பினர்.

முந்தைய நாள் இரவுதான் இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அதே சமயத்தில், கொலையாளி காலையில் வந்திருக்கிறார். எனவே, முதன்மையான இலக்கு யார் என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறோம். மூத்த மகள் அய்னாசுக்கு பணியிடத்தில் பகை ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்.

கொலைகளை செய்துவிட்டு, ஒன்னுமே நடக்காதது போல தனது தாய்வழி உறவினர்களுடன் தீபாவளியைக் கழிக்க பெலகாவியில் உள்ள குடாச்சிக்குச் சென்றுள்ளார் பிரவீன் அருண்" என கூறியுள்ளது. 

மேலும், பிரவீன் அருணும் அய்னாஸும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்ததாகவும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ப்ரவீன் அருணுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget