மேலும் அறிய

Siddaramaiah Condemns Amit Shah: ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி.. அமித்ஷாவின் பேச்சுக்கு சித்தராமையா, கனிமொழி கண்டனம்..!

வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா மற்றும் திமுக எம்.பி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர்சித்த ராமையா மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோர்  கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, “ கர்நாடக ஏகிகரணா இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்களின் முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கலாச்சார பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்து விடுவதாக இருக்கிறது. 

மாநிலங்களுக்கு மொழி சுதந்திரம், கலாச்சார சுதந்திரத்தை அதிகமாக வழங்கவேண்டிய நேரம் இது என பாஜக உணர அனைத்து அகில இந்திய போட்டி தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பை தவிர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அனைத்து மாநில மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். 

கனிமொழி

இது குறித்து கனிமொழி கூறும் போது, ”இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார். 
 
அமித்ஷா பேசியது என்ன?

நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, `ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது `இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றார். 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘”நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். வேற்று மாநில மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும்போது பயன்படுத்த வேண்டிய மொழி இந்திதான். ஆங்கிலம் அல்ல. ஒரு மாநிலத்தின் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் கூறுகையில், ”பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்கவேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியாக இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
TVK DMK: உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
Aadhav Arjuna vs DMK : ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
Embed widget