மேலும் அறிய

Cauvery Water: கூடுதலாக காவிரி நீர் தந்துள்ளோம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் நாட கர்நாடகா முடிவு.. - சிவக்குமார்

அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரை தமிழ்நாடு பயன்படுத்துகிறது என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம்  தேதி டெல்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையும், கரநாடக அரசு விடுத்த கோரிக்கையும் விசாரித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவிரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தண்ணீர் திறப்பு 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 4,398 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விட அதிக அளவு நீரை தமிழ்நாடு பயண்படுத்துகிறது என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்நாடக அணைகளில் போதுமான நீர் இல்லை என்பது தமிழ்நாட்டிற்கு நன்கு தெரியும். கர்நாடக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குடிநீருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது பயிரிடுவதை தமிழ்நாடு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் சட்ட வல்லுநர்களுடன் அலோசித்த நிலையில், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் சென்று கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் மற்றும் நிலமையை எடுத்துக் கூறுவோம் என கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

Resolution: பக்காவாக ஸ்கெட்ச் போட்ட I.N.D.I.A கூட்டணி.. மூன்று முக்கிய தீர்மானங்கள்.. மும்பை கூட்டத்தில் நடந்தது என்ன?

Jailer Success: ரஜினிக்கு ரூ.100 கோடி? நெல்சனுக்கு எத்தனை கோடி? - செக் மேல் செக் கொடுத்து குஷி படுத்தும் கலாநிதி

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget