மேலும் அறிய

பெயிண்ட் வாங்க போனவருக்கு நடந்த சோகம்! நொடிகளில் பிரிந்த உயிர்! பகீர் சிசிடிவி

கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

கர்நாடகாவில் கடையில் பெயிண்ட் வாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலி ஏற்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் மாரடைப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் முதல் பெரியவர் வரை அனைவரும் மாரடைப்பால் இறப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்க்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகாவை சேர்ந்த ஹல்கூர் பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவர் பெயிண்ட் கடைக்கு பெயிண்ட் வாங்க சென்றிருக்கிறார். 

திடீர் மாரடைப்பு: 

அந்த நபர் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட கடையின் உரிமையாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில்  அவர் அங்குள்ள ஹுல்லாகல கிராமத்தைச் சேர்ந்த இரணையா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெயிண்ட் வாங்க வந்தவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பும் கவனமும்:

இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்பி வருகின்றனர். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிகிச்சையளிக்கப்படாத மருத்துவ நிலைமைகள் ஆகியவை இதய சிக்கல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகின்றன. மாரடைப்பு பெரும்பாலும் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் தாக்குகிறது.

திடீர் மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், வியர்வை அல்லது கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. முதல் சில நிமிடங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை ஒரு உயிரைக் காப்பாற்றும். அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் குடிமக்களை இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், வழக்கமான பரிசோதனைகளுக்குச் செல்லவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், CPR போன்ற அடிப்படை உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர், இதனால் அவசர காலங்களில் சரியான நேரத்தில் உதவி வழங்க முடியும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget