மேலும் அறிய

ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த மாதிரி 2 லட்சம் பேருக்கும் கிடைக்குமா? - கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி

’பார்க்கின்ஸன் நோய் உடைய ஒருவர் (ஸ்டான் ஸ்வாமி) எத்தனையோ முறை ஜாமீன் கோரியும் அவர் சாகக் கிடந்த தருவாயில்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.'

மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த வழக்கிலிருந்து அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ள முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியும் ஃபிஜி நாட்டின் நீதிபதியுமான மதன் பி.லோகூர் ‘இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 2 லட்சம் பேரின் ஜாமீன் மனுவுக்கு விடைகிடைக்காமல் உள்ளது. ஆர்யன் கானுக்கு கிடைத்த நீதி இந்த இரண்டு லட்சம் பேருக்கும் கிடைக்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ’பார்க்கின்ஸன் நோய் உடைய ஒருவர் (ஸ்டான் ஸ்வாமி) எத்தனையோ முறை ஜாமீன் கோரியும் அவர் சாகக் கிடந்த தருவாயில்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஸ்டரா வைத்த டம்ளர் கேட்டதைக் கூடத் தரமறுத்துவிட்டார்கள்’ என புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த மாதிரி 2 லட்சம் பேருக்கும் கிடைக்குமா? - கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி

முன்னதாக, ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் சுமார் 25 நாள்களுக்கு முன், போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஷாரூக் கான் தரப்பில் இருந்து ஜாமீன் பெறுவதற்காகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஜாமீன் அளிக்க மறுத்து வந்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

 

இதனையடுத்து, மூன்று தினங்களுக்கு முன்பே சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன், காரணமாக ஆர்யன் கானின் விடுதலை தாமதமானது.வழக்கில் வெளியிட்டுள்ள ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதுஇந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சிறையில் அடைக்கப்பட்ட அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தாமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் கைது குறித்து பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நடிகர் ஷாரூக் கானோ, அவரது மனைவி கௌரி கானோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

’ஷாரூக்கான் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் குழு என தான் கருதிய வழக்கறிஞரை இந்த வழக்கில் வாதிடுவதற்காக கேட்டுக்கொண்டார். ஆனால் ஷாரூக்கான் போன்ற வசதி வாய்ப்பு இந்தியாவில் எத்தனை பேருக்குக் கிடைக்கும். இப்படி கீழ்மை நீதிமன்றங்கள் செய்வதால் எத்தனை பேர் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் தவிக்கின்றனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.’ என ஆர்யன் கானுக்காக வாதிட்ட வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget