மேலும் அறிய

ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த மாதிரி 2 லட்சம் பேருக்கும் கிடைக்குமா? - கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி

’பார்க்கின்ஸன் நோய் உடைய ஒருவர் (ஸ்டான் ஸ்வாமி) எத்தனையோ முறை ஜாமீன் கோரியும் அவர் சாகக் கிடந்த தருவாயில்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.'

மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த வழக்கிலிருந்து அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ள முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியும் ஃபிஜி நாட்டின் நீதிபதியுமான மதன் பி.லோகூர் ‘இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 2 லட்சம் பேரின் ஜாமீன் மனுவுக்கு விடைகிடைக்காமல் உள்ளது. ஆர்யன் கானுக்கு கிடைத்த நீதி இந்த இரண்டு லட்சம் பேருக்கும் கிடைக்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ’பார்க்கின்ஸன் நோய் உடைய ஒருவர் (ஸ்டான் ஸ்வாமி) எத்தனையோ முறை ஜாமீன் கோரியும் அவர் சாகக் கிடந்த தருவாயில்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஸ்டரா வைத்த டம்ளர் கேட்டதைக் கூடத் தரமறுத்துவிட்டார்கள்’ என புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த மாதிரி 2 லட்சம் பேருக்கும் கிடைக்குமா? - கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி

முன்னதாக, ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் சுமார் 25 நாள்களுக்கு முன், போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஷாரூக் கான் தரப்பில் இருந்து ஜாமீன் பெறுவதற்காகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஜாமீன் அளிக்க மறுத்து வந்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

 

இதனையடுத்து, மூன்று தினங்களுக்கு முன்பே சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன், காரணமாக ஆர்யன் கானின் விடுதலை தாமதமானது.வழக்கில் வெளியிட்டுள்ள ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதுஇந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சிறையில் அடைக்கப்பட்ட அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தாமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் கைது குறித்து பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நடிகர் ஷாரூக் கானோ, அவரது மனைவி கௌரி கானோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

’ஷாரூக்கான் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் குழு என தான் கருதிய வழக்கறிஞரை இந்த வழக்கில் வாதிடுவதற்காக கேட்டுக்கொண்டார். ஆனால் ஷாரூக்கான் போன்ற வசதி வாய்ப்பு இந்தியாவில் எத்தனை பேருக்குக் கிடைக்கும். இப்படி கீழ்மை நீதிமன்றங்கள் செய்வதால் எத்தனை பேர் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் தவிக்கின்றனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.’ என ஆர்யன் கானுக்காக வாதிட்ட வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget