மேலும் அறிய

ஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழப்பு - மின்கம்பம் நிறுவும் பணியின்போது ஏற்பட்ட சோகம்!

நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக இதில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோமோ-தன்பாத் ரயில்வே கோட்டத்தின் ஜார்கோர் கேர் அருகே உயர் அழுத்த கம்பி வழியாக மின்சாரம் தாக்கியத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிடைத்த தகவலின்படி, உயிரிழந்த அனைவரும் தன்பாத் மற்றும் கோமோ ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஃபிக்ஸட்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என தெரிய வந்தது. 

மின்கம்பத்தை அமைக்கும்போது 25 ஆயிடம் வோல்ட் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால், 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்சப்படுகிறது. 

பாய்ந்த 25,000 வோல்ட் மின்சாரம்:

தன்பாத் ரயில்வே கோட்டத்தின் ஹவுரா- புது டெல்லி வழித்தடத்தில் தன்பாத் - கோமோ ரயில் நிலையம் இடையே நிஷித்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த இடமானது கட்ராஸ் ரயில் நிலையத்திலிருந்து சரியாக 1 கி.மீ தொலையில் உள்ளது. இங்கு மின்கம்பத்தை அமைக்கும்போது, சுமார் 25,000 வோல்ட் உயர் அழுத்த அளவில் மின்சாரம் பாயந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த தடம் வாயிலாக செல்லவிருந்த ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 

நிறுத்தப்படாத மின்சாரம்: 

இந்த பணியின்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் பணிகள் நடைபெற்றதாவும், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உ.பி.யின் அலகாபாத்தைத் தவிர ஜார்கண்டில் உள்ள பலமு மற்றும் லதேஹரில் வசிப்பவர்கள். இறந்தவர்களில் கோவிந்த் சிங், ஷியாம்தேவ் சிங், சுரேஷ் மிஸ்திரி, ஷியாம் புய்யா, சஞ்சய் ராம் என தெரியவந்தது. 

இந்த விபத்தின்போது நிஷா குமாரி என்ற சிறுமியும் காயமடைந்துள்ளார். இவர் அருகில் இருந்த குழாய் அடி பம்பில் தண்ணீர் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் சிக்கியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget