மேலும் அறிய

ஒரு பழங்குடி முதலமைச்சராக இருப்பதால் இப்படி செய்றாங்க...ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு

இது தொடர்பாக, இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது. இதன் காரணமாக, சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், இதுகுறித்து இன்று பேசியுள்ள சோரன், "நான் குற்றவாளி என்றால், என்னை ஏன் விசாரிக்கிறீர்கள்? முடிந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள். 

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பழங்குடியின முதலமைச்சரை துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நான் பயப்படவில்லை. 

அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. அவர்களை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களின் குரலை நசுக்குகிறது. இந்த சதிக்கு தகுந்த பதில் கிடைக்கும்" என்றார்.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக கட்சி தொண்டர்கள் மத்தியில் தன்னுடைய வீட்டின் வெளியே உரையாற்றிய சோரன், "பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராய்ப்பூருக்கு (சத்தீஸ்கர்) விமானத்தில் செல்ல உள்ளேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் பிஸியாக இருக்கும்போது தொழிலதிபர்கள் தப்பியோட அனுமதிக்கிறது" என்றார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பரிந்துரை அளித்தது தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மத்தியில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொள்வதாக ஆளும் கூட்டணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மூவர் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை மேற்கொண்ட சோரன், "பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதே என்னை துன்புறுத்துவதற்கான முயற்சியின் பின்னணியில் உள்ளது. நிலப்பிரபுத்துவ மக்கள் வெற்றிபெற மக்களை சுரண்டினார்கள். நம் முன்னோர்கள் இழக்க கற்றுக்கொடுக்கவில்லை. போராடி வெற்றி பெற கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Embed widget