மேலும் அறிய

ஒரு பழங்குடி முதலமைச்சராக இருப்பதால் இப்படி செய்றாங்க...ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு

இது தொடர்பாக, இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது. இதன் காரணமாக, சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், இதுகுறித்து இன்று பேசியுள்ள சோரன், "நான் குற்றவாளி என்றால், என்னை ஏன் விசாரிக்கிறீர்கள்? முடிந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள். 

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பழங்குடியின முதலமைச்சரை துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நான் பயப்படவில்லை. 

அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. அவர்களை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களின் குரலை நசுக்குகிறது. இந்த சதிக்கு தகுந்த பதில் கிடைக்கும்" என்றார்.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக கட்சி தொண்டர்கள் மத்தியில் தன்னுடைய வீட்டின் வெளியே உரையாற்றிய சோரன், "பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராய்ப்பூருக்கு (சத்தீஸ்கர்) விமானத்தில் செல்ல உள்ளேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் பிஸியாக இருக்கும்போது தொழிலதிபர்கள் தப்பியோட அனுமதிக்கிறது" என்றார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பரிந்துரை அளித்தது தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மத்தியில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொள்வதாக ஆளும் கூட்டணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மூவர் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை மேற்கொண்ட சோரன், "பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதே என்னை துன்புறுத்துவதற்கான முயற்சியின் பின்னணியில் உள்ளது. நிலப்பிரபுத்துவ மக்கள் வெற்றிபெற மக்களை சுரண்டினார்கள். நம் முன்னோர்கள் இழக்க கற்றுக்கொடுக்கவில்லை. போராடி வெற்றி பெற கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்" என பதிவிட்டிருந்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget