Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாளை(26.01.25) கொண்டாடப்பட உள்ள குடியரசு தினம் குறித்த சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

குடியரசு தினம் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது, விடுமுறை தினம், கொடி ஏற்றுவது, இனிப்புகள் வழங்கப்படுவதுதான். ஆனால், எத்தனை பேருக்கு அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் தெரியும். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
குடியரசு தினத்தின் வரலாறு...
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறினாலும், 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. பினனர் இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆண்டில் ஜனவரி 26-ம் தேதியை, மக்களாட்சி மலர்ந்த தினமாக கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து, அதை அறிவித்து செயல்படுத்தியது. அப்போது முதல் முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுவதோடு, ஜனவரி 26 ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
குடியரசு தினம் குறித்த சில முக்கிய தகவல்கள்
- 1930-ம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினரின் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைக்கூவலை நினைவுகூர, ஜனவரி 26-ம் தேதி விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1946 டிசம்பர் 12-ம் தேதி, ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4-ம் தேதி அரசியலமைப்பு சட்ட வரைவை சமர்ப்பித்தது.
- 1950-ம் ஆண்டு, புது டெல்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் முதல் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3000 வீரர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களும் கலந்துகொண்டன.
- ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு ஒரு தீம் முடிவு செய்யப்பட்டு, அனைத்து மாநில அரசுகளும் அதை பின்பற்றுகின்றன.
- 2025-ம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தீம் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின அணிவகுப்பிற்கு, ஒரு நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் அல்லது ஆட்சியாளர் முதன்மை விருந்தினராக அழைக்கப்படுகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார்.
- குடியரசு தினத்தன்று, உயிரைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் அதீத துணிச்சலை காட்டிய குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தேசிய வீர விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
- குடியரசு தின அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் ஒரு வருடத்திற்கு முன்பே, ஜூலை மாதத்தில் தொடங்குகிறது. அணிவகுப்பு நாளில், பங்கேற்பாளர்கள் அதிகாலை 3 மணிக்கே அணிவகுப்பு தொடங்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அப்போது, சுமார் 600 மணி நேர பயிற்சியை அவர்கள் செய்திருப்பார்கள்.
- இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கான முழு ஆடை ஒத்திகை ஜனவரி 23-ம் தேதியன்று நடைபெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

