Lower Berth Seat: இனி எல்லோருக்கும் லோயர் பெர்த் கிடையாது; இவர்களுக்கு மட்டும் தான்! ரயில்வே புது ரூல்!
Railway Lower Berth Rule: இனிமேல் மூத்த குடிமக்களுக்காக பெர்த் புக் செய்யும்போது லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம். அதற்குதான் இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது ரயில்வே.
லோயர் பெர்த் தொடர்பாக ரயில்வே புதிய விதியை உருவாக்கியுள்ளது.
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். அவர்களுக்காக பல சலுகைகளையும் ரயில்வே அவ்வபோது வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மூத்த குடிமக்களுக்கும் ரயில்வே சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது மூத்த குடிமக்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சலுகையை இந்தியன் ரயில்வே வழங்க புது விதியை உருவாக்கியுள்ளது.
இனிமேல் மூத்த குடிமக்களுக்காக பெர்த் புக் செய்யும்போது லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம். அதற்குதான் இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது ரயில்வே. இந்த முறையை பயன்படுத்தி புக் செய்தால் கண்டிப்பாக லோயர் பெர்த் கிடைக்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் பயணத்தை எளிதாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக ஒதுக்குவது பற்றி IRCTC தெரிவித்துள்ளது.
இதனிடையே “மாமாவுக்கு ரயில் டிக்கெட் புக் செய்ததாகவும், கால்களில் பிரச்னை இருந்ததால் கீழ் பெர்த்துக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும், ஆனால் அப்போதும் ரயில்வே அவருக்கு மேல் பெர்த் கொடுத்ததாகவும்” பயணி ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
🚨 Railways has issued a new rule regarding lower berth, now the lower seat will be reserved for senior citizens. pic.twitter.com/dRYMu40GoK
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 12, 2024
பயணிகளின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, ”பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும். இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் கீழ் புக் செய்திருந்தால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முதல் சேவை அடிப்படையில் கிடைக்கும். பொது ஒதுக்கீட்டில் இடம் பெறுவதில் மனித தலையீடு இல்லை. இருப்பினும், நீங்கள் TTE-யை லோயர் பெர்த்துக்கு அணுகலாம் மற்றும் லோயர் பெர்த்துக்கு நீங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம். லோயர் பெர்த் கிடைத்தால் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.