மேலும் அறிய

அமைதிக்கான நோபல் பரிசு...இந்திய பத்திரிகையாளர்களின் பெயர்கள் பரிந்துரை...பெருமைமிகு தருணம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை நார்வே நோபல் கமிட்டி வெளியிடவில்லை.

 

புகழ்பெற்ற டைம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் செய்தி இணையதளமான alt news நிறுவனர்கள் பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நார்வேயின் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து நபர்கள் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெலாரஷ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகனுஸ்காயா, பிரிட்டன் ஒளிபரப்பாளர் டேவிட் அட்டன்பரோ, உலக சுகாதார அமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், போப் பிரான்சிஸ், துவாலுவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் கோஃப் மற்றும் மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசு ஆகியோரது பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் அவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது. வெற்றியாளர் யார் என்பதை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை கணித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டின் மூலம் ஆத்திரமூட்டும் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டியதாக முகமது ஜுபைர் மீது இந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாகவும் டெல்லி காவல்துறை அவர் மீது குற்றம் சாட்டியது.

முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் குறைந்துள்ளது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு விரோதமான மற்றும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான், ஜூபைர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் சுமார் 343 வேட்பாளர்கள் உள்ளனர். 251 பேர் தனிநபர்கள் மற்றும் 92 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Tamilnadu Roundup 10.07.2025: இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்
Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Tamilnadu Roundup 10.07.2025: இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்
Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்
Texas Flood Update: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு, முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் - விவரம் இதோ
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு, முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் - விவரம் இதோ
Xiaomi YU7: 72 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்பதிவு - என்னயா கார் இது? ஈயாய் மொய்த்த கூட்டம், 62 வாரங்களா?
Xiaomi YU7: 72 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்பதிவு - என்னயா கார் இது? ஈயாய் மொய்த்த கூட்டம், 62 வாரங்களா?
Donald Trump: என்னா சார் இதெல்லாம்.? புதிதாக 6 நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதம் - இந்த முறை சிக்கிய நாடுகள் எவை தெரியுமா.?
என்னா சார் இதெல்லாம்.? புதிதாக 6 நாடுகளுக்கு ட்ரம்ப் கடிதம் - இந்த முறை சிக்கிய நாடுகள் எவை தெரியுமா.?
Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
“இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
Embed widget