மேலும் அறிய

அமைதிக்கான நோபல் பரிசு...இந்திய பத்திரிகையாளர்களின் பெயர்கள் பரிந்துரை...பெருமைமிகு தருணம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவின் alt news செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை நார்வே நோபல் கமிட்டி வெளியிடவில்லை.

 

புகழ்பெற்ற டைம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் செய்தி இணையதளமான alt news நிறுவனர்கள் பிரதிக் சின்ஹா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நார்வேயின் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து நபர்கள் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெலாரஷ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகனுஸ்காயா, பிரிட்டன் ஒளிபரப்பாளர் டேவிட் அட்டன்பரோ, உலக சுகாதார அமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், போப் பிரான்சிஸ், துவாலுவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் கோஃப் மற்றும் மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசு ஆகியோரது பெயர்களை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் அவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது. வெற்றியாளர் யார் என்பதை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை கணித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டின் மூலம் ஆத்திரமூட்டும் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டியதாக முகமது ஜுபைர் மீது இந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாகவும் டெல்லி காவல்துறை அவர் மீது குற்றம் சாட்டியது.

முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் குறைந்துள்ளது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு விரோதமான மற்றும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான், ஜூபைர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் சுமார் 343 வேட்பாளர்கள் உள்ளனர். 251 பேர் தனிநபர்கள் மற்றும் 92 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget