மேலும் அறிய

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை: ட்ராய் அமைப்பின் 25 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

முந்தைய ஆட்சிகளில் 2ஜியை விட்டே நகர முடியாத சூழல் நிலவியது. அந்த ஆட்சியின் மோசமான கொள்கை மற்றும் ஊழலே இதற்கு காரணம்.

ட்ராய் அமைப்பின் 25 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறியுள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதனை தலைமேயேற்று நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, ட்ராய் அமைப்பின் அஞ்சல் தலையை வெளியிட்டார். விழாவில் உரையற்றிய பிரதமர் மோடி, "இந்திய தொலைத்தொடர்பு துறை வேகமான பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்கள் இயங்கி வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆகவுள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் பத்தாண்டுகளில் 6ஜி சேவை கிடைத்துவிடும்" என்று உறுதி கூறினார்.

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை: ட்ராய் அமைப்பின் 25 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும் பேசிய அவர், "இந்த 5ஜி தொழில்நுட்பம் மூலம் நாட்டில் 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பொருளாதார ஏற்றம் ஏற்படும். 5 ஜி தொழில்நுட்பமானது இணைய சேவை வேகத்தை மட்டும் அதிகரிக்காது. இது வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகள் இதன் மூலம் மேம்படும். அடுத்தாக 6ஜி அமல்படுத்தும் திட்டத்தை நோக்கி இந்தியா அடுத்ததாக நகர்கிறது." என்றார்.

6ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், "2030ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 6 ஜி சேவை அமலாகும். முந்தைய ஆட்சிகளில் 2ஜியை விட்டே நகர முடியாத சூழல் நிலவியது. அந்த ஆட்சியின் மோசமான கொள்கை மற்றும் ஊழலே இதற்கு காரணம். ஆனால் தற்போதைய அரசு 4ஜி, 5ஜி தொடர்ந்து 6ஜி என வேகமாக முன்னேறி செல்கிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்ட ட்ராய் அமைப்பு பெரும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளது. சந்தையின் தேவைக்கு ஏற்ப அரசு கொள்கை முடிவுகளை மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துகிறது." என்று கூறினார்.

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை: ட்ராய் அமைப்பின் 25 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும், "இதன் காரணமாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு கடந்த 8 ஆண்டுகளில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி மையங்கள் 2 இல் இருந்து 200ஆக அதிகரித்துள்ளது. உலகின் மாபெரும் மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சேவை என்பது தற்சார்பு இந்தியாவின் மைல்கல்" என்று பெருமைகொண்டார் பிரதமர் மோடி.

நாட்டில் ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு தங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. அதேவேளை, அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையை அமல்படுத்தவில்லை. இந்தாண்டு இறுதியில்தான் பிஎஸ்என்எல் 4ஜி சேவையையே அமல்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget