மேலும் அறிய

மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்ததில் பல ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, Integrated Counter-UAS (Unmanned Aircraft System) Grid (ட்ரோன்கள்), S 400 Triumf system ஆகியவை பயன்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெளிவான மெசேஜ் சொல்லி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே நேரத்தில் 9 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி அளித்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மேற்கு மற்றும் வடக்கு எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது இந்தியா. தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா, இதன்மூலம் தெரிவித்திருக்கிறது.

விரைவாகவும் முப்படைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பின் இருக்கும் தயார் நிலை ஒரு நாளில் சாதிக்கப்பட்டவை அல்ல. கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அமைந்துள்ளது.

இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள்:

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்ததில் பல ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் Integrated Counter-UAS (Unmanned Aircraft System) Grid (ட்ரோன்கள்), S 400 triumf system (ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகள்), Barak 8 (இந்தியா - இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய ஏவுகணைகள்), Akash (DRDO தயாரித்த உள்நாட்டு ஏவுகணை), ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் (DRDO தயாரித்தவை) ஆகியவை பெரிய அளவில் பயன்பட்டன.

தன்னை தற்காத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் விரைவாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தி இருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் மண்ணில் புகுந்து லாகூரில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் HQ-9 ஏவுகணைகளை தாக்கி அழித்தது. முக்கியான ரேடார் அமைப்புகளை காலி செய்துள்ளது.

இந்தியா சொல்ல வரும் மெசேஜ் என்ன?

தயாராக இருந்து இந்தியா திருப்பி அடித்தது ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல. கடந்த 25 ஆண்டுகளாக இந்திய வான் பாதுகாப்பு அமைப்பினை பலப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளே காரணம்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ரூ. 35,000 கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து S 400 triumf system (நிலத்தில் இருந்து வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை) 5 ஸ்க்வாட்ரான்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், 3 ஸ்க்வாட்ரான்களை பாகிஸ்தான், சீன நாடுகள் உடனான எல்லையில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

Barak 8 எனப்படும் நிலத்தில் இருந்து வானுக்கு சென்று தாக்கும் மீடியம் ரேஞ் ஏவுகணைகளை (MR-SAM) கடந்த 2017ஆம் ஆண்டு, மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கியது. 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான Barak 8 ஏவுகணைகள்தான், பஞ்சாப் பதிண்டா முன்கள ராணுவ தளத்தை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.

உள்நாட்டில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட Akash ஏவுகணைகளும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்.

தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெரிவித்திருக்கிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget