மேலும் அறிய

Myanmar Issue: மியான்மர் ராக்கைன் பகுதிக்கு செல்ல வேண்டாம் .. பதற்றம் அதிகரிக்கும் நிலையில் இந்தியர்களுக்கு அறிவுரை..

மியான்மரின் ராக்கைன் மாநிலத்திற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மியான்மரின் ராக்கைன் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்தியா வெளியுறவுத் துறை,  அறிவுறுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான சூழலை கருத்தில் கொண்டு , இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் (MEA) கேட்டுக் கொண்டுள்ளது.  

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் அரக்கான் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவின் கை ஓங்கி இருக்கிறது. இதனிடையே சமீப ஆண்டுகளாக மியான்மர் நாட்டிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைவது அதிகரித்து வருகிறது.  மியான்மரில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியா-மியான்மர் இடையே உள்ள 1,643 கிலோமீட்டர் எல்லையில் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவலை தடுக்கும் வகையில் அந்நாட்டின் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கி.மீ நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படுகிறது. வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்”  என குறிப்பிட்டுள்ளார்.    

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் யாரும் மியான்மரில் இருக்கும் ராக்கைன் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அப்பகுதியில் இருக்கு இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.  கடந்த 3 ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ராக்கைன் மாநிலம் மற்றும் பல பிராந்தியங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஆயுதமேந்திய இனக்குழுக்களுக்கும் - மியான்மர் இராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

மியான்மர் ராணுவம் தனது எதிரிகளையும், ஆளும் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களையும் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மியான்மர் இந்தியாவின் மூலோபாய அண்டை நாடுகளில் ஒன்றாகும், மேலும் இது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மற்றும் மணிப்பூர் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த வாரம், அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைக்க  இந்தியா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget