கொளுத்தும் வெயில்.. எகிறிய மின்சாரத் தேவை.. சென்னையில் மின்வெட்டு! மத்திய அரசின் வேண்டுகோள்
மத்திய மின்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று பகல் நேரத்தின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 270.82 கிகாவாட்டாக பதிவாகியுள்ளது. இது இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, கடந்த நான்கு நாட்களில் இந்தியாவின் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மின்வெட்டு:
கடுமையான கோடைவெப்பத்தினால் மின்சார தேவை அதிகரித்து வருவதால் சென்னையின் முக்கிய இடங்களில் மின்வெட்டானது ஏற்ப்பட்டு பொதுமக்கள் மின்சார அலுவலகங்களை முற்றுகையிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் மின்வெட்டானது தொடர்ந்து வருகிறது.
உச்சத்தை தொட்ட மின்சார தேவை:
மத்திய மின்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று பகல் நேரத்தின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 270.82 கிகாவாட்டாக (Gigawatts) பதிவாகியுள்ளது. இது இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.
கடந்த சில நாட்களின் மின்சாரத் தேவை விபரம்:
-
திங்கட்கிழமை: 257 கிகாவாட்டிற்கும் அதிகம்
-
செவ்வாய்க்கிழமை: 260 கிகாவாட்டிற்கும் அதிகம்
-
புதன்கிழமை: 265 கிகாவாட்டிற்கும் அதிகம்
-
வியாழக்கிழமை (நேற்று): 270.82 கிகாவாட் (புதிய உச்சம்
— Ministry of Power (@MinOfPower) May 22, 2026
பொதுவாக பகல் நேரத்தில் மின்சாரத்திற்கான உச்சக்கட்டத் தேவை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படுகிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது
இதையும் படிங்க: TN Heatwave: சென்னை மக்களே அலர்ட் - வெப்ப அலை வீசும் என வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை
அமைச்சகத்தின் அறிவுறுத்தல்:
கோடைக்காலம் தீவிரமாக இருப்பதால், தேவைக்கேற்ப தடங்கலின்றி மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், பொதுமக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்























