மேலும் அறிய

தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்

தாக்குதல் நடத்துவதுதான் இந்தியாவின் பணி என்றும், சடலங்களை எண்ணுவது பாகிஸ்தானின் பணி என்றும் ஏர் மார்ஷல் தெரிவித்தார்.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியாவின் முப்படைகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் மோதல்:

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா நடத்தி வரும் நிலையில் இன்று முப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் ஏகே பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத். மேஜர் ஜெனரல் ஷர்தா இணைந்து நிருபர்களைச் சந்தித்தனர். 

அப்போது, அவர்கள் கூறியதாவது, 

பயணிகள் விமானம்:

எங்களுடைய மோதல் பயங்கரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல. பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல் முயற்சிகளும் இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடிப்பு. பாகிஸ்தானின் லாகூரில் ரேடார் அமைப்புகளை அழித்தோம். 

நமது விமானப்படை தயாராக இருந்ததால், ட்ரோன்கள் தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதித்தது. இந்தியா பதில் தாக்குதல் நடத்தியபோது பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாகிஸ்தான். 

எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் முறியடித்தோம். பாகிஸ்தானினவ் சர்கோடா, ரஹீம், யார்கான், நூர்கான் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். 

தக்க பதிலடி:

அலை அலையாக வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. இந்தியா நடத்திய தாக்குதலில் 35 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்கினால் சும்மா விடமாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். பதிலடி தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

தாக்குதல் நிறுத்துவதாக முடிவெடுத்த 2 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். மீண்டும் தாக்கினால் கடுமையான பதிலடி இருக்கும் என்ற பாகிஸ்தானுக்கு ஹாட்லைனில் தகவல் அனுப்பியுள்ளோம். 

சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி

எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவம் அல்ல, தவிர்க்க முடியாத காரணத்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தாக்குதல் நடத்துவதுதான் எங்கள் பணி, சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி. மீண்டும் தாக்கினால் விளைவுகள் படுமோசமாக இருக்கும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

தாக்குதல் நடத்துவதுதான் இந்தியாவின் பணி, சடலங்களை எண்ணுவது பாகிஸ்தான் பணி என்று ஏர் மார்ஷல் ஏகே பார்தி தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கே பெரும் பின்னடைவாக அமையும் என்றே பலரும் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக ஏற்கனவே பின்னடைவில் உள்ள பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதினால் அவர்களது பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படவே வாய்ப்புகள்  அதிகம் ஆகும். 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget