மேலும் அறிய

தொடரும் ஐஐடி தற்கொலைகள்.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஃபைசான் அகமது என்ற இயந்திர பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த அக்டோபர் 16 அன்று, காரக்பூரில் உள்ள ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) விடுதியில் ஒரு மாணவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஃபைசான் அகமது என்ற இயந்திர பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், "ராகிங் மூலம் அவரை மோசமான மனநிலைக்கு தள்ளினர். அவரது புகார்களை ஐஐடி - காரக்பூர் நிர்வாகம் கேட்கக்கூட இல்லை. இது தெளிவான கொலை வழக்கு" என தெரிவித்தனர். 

மாணவர் இறந்தது தொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின்போது, "பாதிக்கப்பட்டவருக்கு ராகிங் கொடுமை நடந்தது தெரிய வந்துள்ளது. அதை, நிரூபிப்பதற்கு நீதிமன்றத்திடம் கணிசமான ஆதாரங்கள் உள்ளன. போலீசார் சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஐஐடியில் அடக்குமுறை இருந்தால், கூடுதல் எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகிங் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ராகிங் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஐஐடி இயக்குனரிடம் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. ராகிங் நடந்திருப்பது என நிறுவ பைசான் அகமதின் நீக்கப்பட்ட பேஸ்புக் பதிவை அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவரின் குடும்ப வழக்கறிஞர் ரஞ்சித் சட்டர்ஜி, இதுகுறித்து பேசுகையில், "மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையே சண்டைகள் நடந்தன. ஃபைசான் அகமது தனிமைப்படுத்தப்பட்டார். முதலில் அவருக்கு ஆதரவளித்தவர்கள் பின்னர் ஆதரவை வாபஸ் பெற்றனர். கடுமையான ராகிங் குறித்த புகார்கள் குறித்து வார்டன்கள் மாணவர்களை எச்சரித்தனர்.

வளாகத்தில் ராகிங் நடந்ததற்கும், ராகிங்கைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதற்கும் இப்போது ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. நடவடிக்கை எடுத்திருந்தால், பைசான் அகமதின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்" என்றார்.

ஆதாரங்களை கருத்தில் கொண்ட கல்கத்தா உயர் நீதிமன்றம், "வார்டனின் அறிக்கையை ஏன் காவல்துறையிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று ஐஐடி காரக்பூரிடம் கேட்டது. அடுத்த விசாரணையில் மிகவும் உறுதியான ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கை நவம்பர் 22ம் தேதி கல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. 

ஐஐடி காரக்பூர் மரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். ஐஐடி வளாகங்களில் ஏழு மாணவர்களின் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget