மேலும் அறிய

தொடரும் ஐஐடி தற்கொலைகள்.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஃபைசான் அகமது என்ற இயந்திர பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த அக்டோபர் 16 அன்று, காரக்பூரில் உள்ள ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) விடுதியில் ஒரு மாணவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஃபைசான் அகமது என்ற இயந்திர பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், "ராகிங் மூலம் அவரை மோசமான மனநிலைக்கு தள்ளினர். அவரது புகார்களை ஐஐடி - காரக்பூர் நிர்வாகம் கேட்கக்கூட இல்லை. இது தெளிவான கொலை வழக்கு" என தெரிவித்தனர். 

மாணவர் இறந்தது தொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின்போது, "பாதிக்கப்பட்டவருக்கு ராகிங் கொடுமை நடந்தது தெரிய வந்துள்ளது. அதை, நிரூபிப்பதற்கு நீதிமன்றத்திடம் கணிசமான ஆதாரங்கள் உள்ளன. போலீசார் சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஐஐடியில் அடக்குமுறை இருந்தால், கூடுதல் எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகிங் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ராகிங் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஐஐடி இயக்குனரிடம் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. ராகிங் நடந்திருப்பது என நிறுவ பைசான் அகமதின் நீக்கப்பட்ட பேஸ்புக் பதிவை அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவரின் குடும்ப வழக்கறிஞர் ரஞ்சித் சட்டர்ஜி, இதுகுறித்து பேசுகையில், "மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையே சண்டைகள் நடந்தன. ஃபைசான் அகமது தனிமைப்படுத்தப்பட்டார். முதலில் அவருக்கு ஆதரவளித்தவர்கள் பின்னர் ஆதரவை வாபஸ் பெற்றனர். கடுமையான ராகிங் குறித்த புகார்கள் குறித்து வார்டன்கள் மாணவர்களை எச்சரித்தனர்.

வளாகத்தில் ராகிங் நடந்ததற்கும், ராகிங்கைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதற்கும் இப்போது ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. நடவடிக்கை எடுத்திருந்தால், பைசான் அகமதின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்" என்றார்.

ஆதாரங்களை கருத்தில் கொண்ட கல்கத்தா உயர் நீதிமன்றம், "வார்டனின் அறிக்கையை ஏன் காவல்துறையிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று ஐஐடி காரக்பூரிடம் கேட்டது. அடுத்த விசாரணையில் மிகவும் உறுதியான ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கை நவம்பர் 22ம் தேதி கல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. 

ஐஐடி காரக்பூர் மரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். ஐஐடி வளாகங்களில் ஏழு மாணவர்களின் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
Embed widget