மேலும் அறிய

Pegasus | 45 நாடுகள் பெகசஸ் பயன்படுத்துகின்றன. இந்தியாவுக்கு குறிவைப்பது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர்..!

பெகசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்று சந்தேகங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

பெகசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்று அடுக்கடுக்கான சந்தேகங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பு தான் பெகசஸ் ஸ்பேவர். இந்த உளவு மென்பொருளை அந்நிறுவனமானது தீவிரவாதிகள், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இன்னும் பிற குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பான பெகசஸ் ஸ்பைவேரை வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து இந்த ஸ்பைவேரை வாங்கிவைத்துள்ளது. தி வயர் ஆங்கில இணையதளத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு செய்தி வெளியானது. அதில், 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 இந்தியர்களின் செல்போன்களை பெகாசஸ் ஸ்பைவே கொண்டு மத்திய அரசு ஒட்டுகேட்டதாகத் தெரிவித்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் பெயரும் பெகசஸ் ஸ்பைவே சர்ச்சையில் சிக்கியது. இதனால், நேற்று நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இந்த சர்ச்சை வெடித்ததால் பாஜக இது எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஊடகங்கள் செய்த சதி என்று கூறுகிறது.

எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், டெல்லியில் நேற்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது:

என்எஸ்ஓவின் பெகசஸ் ஸ்பைவேரை உலகம் முழுவதும் 45 நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவை மட்டுமே குறிவைத்து சர்ச்சைகள் எழுப்பக் காரணம் என்ன? இஸ்ரேல் நிறுவனமே எங்களின் ஸ்பைவேரைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனர் மேற்கத்திய நாடுகளே என்று கூறியிருக்கிறது. இருப்பினும், இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்தக் கட்டுக்கதையை கட்டமைத்தவர்கள் யார்? 

மேலும், மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முதல் நாள் இந்தச் செய்தியை உடைக்க வேண்டும் என சில செய்தி நிறுவனங்கள் காத்திருந்து வெளியிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வேண்டுமென்றே சிலரின் பெயரையும் கசியவிட்டுள்ளன. பெகசஸ் கதையில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எங்களுக்கு எதிரான ஆதாரம் எதையும் எதிர்க்கட்சிகள் காட்டமுடியாததே இதற்கு சான்று.

ஆம்னெஸ்டி இந்தியா போன்ற அமைப்புகள் இந்தியா விரோத கொள்கை கொண்டவை. பிரான்ஸின் ஃபோர்பிட்டன் ஸ்டோரிஸ் இணையத்தில் ஆம்னெஸ்டி இந்தியா வெளியிட்டுள்ள பட்டியல் ஆதாரமற்றவை. 2019ல் வாட்ஸ் அப் நிறுவனமும் இதேபோல் பெகசஸ் ஸ்பைவேரால் தங்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறியது. இவையெல்லாம் மத்திய அரசின் மாண்பை சிதைக்க களங்கள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர வேறொன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget