மேலும் அறிய

Pegasus | 45 நாடுகள் பெகசஸ் பயன்படுத்துகின்றன. இந்தியாவுக்கு குறிவைப்பது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர்..!

பெகசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்று சந்தேகங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

பெகசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்று அடுக்கடுக்கான சந்தேகங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பு தான் பெகசஸ் ஸ்பேவர். இந்த உளவு மென்பொருளை அந்நிறுவனமானது தீவிரவாதிகள், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இன்னும் பிற குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பான பெகசஸ் ஸ்பைவேரை வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து இந்த ஸ்பைவேரை வாங்கிவைத்துள்ளது. தி வயர் ஆங்கில இணையதளத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு செய்தி வெளியானது. அதில், 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 இந்தியர்களின் செல்போன்களை பெகாசஸ் ஸ்பைவே கொண்டு மத்திய அரசு ஒட்டுகேட்டதாகத் தெரிவித்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் பெயரும் பெகசஸ் ஸ்பைவே சர்ச்சையில் சிக்கியது. இதனால், நேற்று நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இந்த சர்ச்சை வெடித்ததால் பாஜக இது எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஊடகங்கள் செய்த சதி என்று கூறுகிறது.

எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், டெல்லியில் நேற்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது:

என்எஸ்ஓவின் பெகசஸ் ஸ்பைவேரை உலகம் முழுவதும் 45 நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவை மட்டுமே குறிவைத்து சர்ச்சைகள் எழுப்பக் காரணம் என்ன? இஸ்ரேல் நிறுவனமே எங்களின் ஸ்பைவேரைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனர் மேற்கத்திய நாடுகளே என்று கூறியிருக்கிறது. இருப்பினும், இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்தக் கட்டுக்கதையை கட்டமைத்தவர்கள் யார்? 

மேலும், மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முதல் நாள் இந்தச் செய்தியை உடைக்க வேண்டும் என சில செய்தி நிறுவனங்கள் காத்திருந்து வெளியிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வேண்டுமென்றே சிலரின் பெயரையும் கசியவிட்டுள்ளன. பெகசஸ் கதையில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எங்களுக்கு எதிரான ஆதாரம் எதையும் எதிர்க்கட்சிகள் காட்டமுடியாததே இதற்கு சான்று.

ஆம்னெஸ்டி இந்தியா போன்ற அமைப்புகள் இந்தியா விரோத கொள்கை கொண்டவை. பிரான்ஸின் ஃபோர்பிட்டன் ஸ்டோரிஸ் இணையத்தில் ஆம்னெஸ்டி இந்தியா வெளியிட்டுள்ள பட்டியல் ஆதாரமற்றவை. 2019ல் வாட்ஸ் அப் நிறுவனமும் இதேபோல் பெகசஸ் ஸ்பைவேரால் தங்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறியது. இவையெல்லாம் மத்திய அரசின் மாண்பை சிதைக்க களங்கள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர வேறொன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget