மேலும் அறிய

Crime : பாலியல் ஆசையை தூண்டும் என நம்பி வேட்டையாடப்படும் வெளிநாட்டுப் பறவை ஹவுபாரா மீட்பு..

இந்தப் பறவையின் இறைச்சி பாலியல் வேட்கையைத் தூண்டும் எனும் நம்பிக்கை உலகின் பல பகுதிகளில் நிலவும் நிலையில், அருகி வரும் இந்தப் பறவை இனம் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவை ஒன்று முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர சிந்துதுர்க் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளில் பிரபலமான இப்பறவை, பாகிஸ்தானின் அருகி வரும் பறவை இனங்களுள் ஒன்று. இவை அரபு நாடுகளில் இருந்து பாகிஸ்தான் பக்கம் குடிபெயர்வதை வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தப் பறவையின் இறைச்சி பாலியல் வேட்கையைத் தூண்டும் எனும் நம்பிக்கை இப்பகுதிகளில் பெரிதும் நிலவும் நிலையில், அருகி வரும் இந்தப் பறவை இனம் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறது.

இந்நிலையில், முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் இந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வன அலுவலர்களால் மீட்கப்பட்ட இந்தப் பறவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதால், இவற்றின் குளிர்கால வசிப்பிடமான ராஜஸ்தான் அல்லது குஜராத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்துதுர்க், முண்டேஜ் கிராமத்தில் விவசாயி ஒருவர் முன்னதாக காலில் வளையத்துடன் பார்ப்பதற்கு தனித்துவமாக, அழகாக இருந்த இந்தப் பறவையைக் கண்டு தகவல் அளித்ததை அடுத்து, தாங்கள் அங்கு சென்று பறவையை மீட்டதாக உள்ளூர் வன அலுவலர் ராஜேந்திர குணகிகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முன்னதாகப் பேசிய பறவை ஆர்வலர்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில நிறுவனங்கள் இந்த பறவை இனத்தை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சிறைபிடித்து இனப்பெருக்கம் செய்து அதிக எண்ணிக்கையில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பறவைகள் பொதுவாக ஒவ்வொரு குளிர்காலத்திலும் மத்தியக் கிழக்கிலிருந்து தார் மற்றும் கட்ச் பாலைவனங்களுக்கு இடம்பெயர்கின்றன. சில சமயங்களில் ஒரு பறவை அல்லது இரண்டு பறவைகள் கூட்டத்திலிருந்து விலகி கொங்கனின் கடலோரப் பகுதிக்கு பறக்கின்றன” எனத் தெரிவித்துள்ளனர்.

சிந்துதுர்க்கில் கண்டெடுக்கப்பட்ட ஹவுபாரா பஸ்டர்ட் அதன் தோற்றம் பற்றிய தகவல்களைக் கூறி, அபுதாபியில் உள்ள தேசிய பறவை வள மையத்தைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர்கள் வெளியிட்ட பறவை மந்தையைச் சேர்ந்த பறவை இது என்பதை உறுதிப்படுத்தினர்," என பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் உதவி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுஜித் நாரவாடே தெரிவித்துள்ளார்.

ஹவுபாரா பஸ்டர்ட் பறவையை வேட்டையாட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் வேட்டையாட பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. 

முன்னதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்தப் பறவைகளை வேட்டையாட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறப்பு அனுமதி வழங்கியது பெரும் கண்டனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPSSivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
Embed widget