மேலும் அறிய

IELTS தேர்வில் அதிக மதிப்பெண்..ஆங்கிலத்தில் பேச திணறியதால் அதிர்ச்சி.. பேசுபொருளான குஜராத் மாணவர்கள்..

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில், ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவித்ததையடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

IELTS ஆங்கில புலமைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவித்ததையடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடாவில் இருந்து படகில் அமெரிக்காவுக்குள் சென்றபோது இவர்கள் பிடிபட்டனர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். அமெரிக்க அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெஹ்சானா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் பவேஷ் ரத்தோட், "கனடா எல்லைக்கு அருகே, 19 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆறு பேர், அமெரிக்காவின் அக்வேசாஸ்னேவில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து பிடிபட்டனர்.

இவர்கள் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தவறிவிட்டனர். நீதிமன்றம் இந்தி மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாட வேண்டியிருந்தது. இந்த மாணவர்கள் ஐஇஎல்டிஎஸ்-ல் 6.5 முதல் 7 மதிப்பெண்கள் எடுத்ததால் நீதிமன்றம் குழப்பமடைந்துள்ளது" என்றார்.

சர்வதேச ஆங்கில மொழி சோதனை தேர்வு (IELTS) என்பது வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு வைக்கப்படும் ஆங்கில புலமைக்கான ஒரு நிலையான தேர்வாகும். பல நாடுகளில் உள்ள நல்ல கல்லூரிகளில் சேர்வதற்கு, இதில் நல்ல மதிப்பெண் எடுப்பது அவசியம்.

இந்த செய்தியை கேட்ட இணைய வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த ஆறு இளைஞர்களும் செப்டம்பர் 25, 2021 அன்று தெற்கு குஜராத்தின் நவ்சாரி நகரில் தேர்வெழுதினர். அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபடுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மாணவர் விசாவில் கனடாவுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளது.

தேர்வு நடைபெற்ற அறையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ரத்தோட் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். தேர்வை நடத்த அதிகாரம் பெற்ற ஏஜென்சியின் உரிமையாளர்கள், விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
Embed widget