மேலும் அறிய

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்

குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை தொடர்பான ரகசிய தகவல்களை 40,000 ரூபாய்க்காக கசியவிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜென்டிடம் அந்த நபர் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குஜராத் இளைஞர்:

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்தவர் சஹ்தேவ் சிங் கோஹில். இவருக்கு வயது 28. சுகாதார ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவின் ATS) மூத்த அதிகாரி கே. சித்தார்த் கூறுகையில், "கடந்த 2023 ஆம் ஆண்டு, அதிதி பரத்வாஜ் என்று சொல்லி கொண்டு, சஹ்தேவ் சிங்கிடம் வாட்ஸ்அப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

புதிதாக கட்டப்பட்ட அல்லது கட்டப்பட்டு வரும் உள்ள இந்திய விமானப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு சஹ்தேவ் சிங் அனுப்பியுள்ளார். அவர் பாகிஸ்தான் ஏஜென்டிடம் பிஎஸ்எஃப் மற்றும் ஐஏஎஃப் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்:

கடந்த மே 1 ஆம் தேதி, முதற்கட்ட விசாரணைக்காக சஹ்தேவ் சிங் அழைக்கப்பட்டார். அப்போது, பாகிஸ்தான் ஏஜென்ட், அவரிடம் IAF மற்றும் BSF தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்டிருப்பதை சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி சஹ்தேவ் சிங் சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார். OTP உதவியுடன் அதிதி பரத்வாஜுக்கு அந்த எண்ணில் WhatsApp ஐ செயல்படுத்தினார். அதன் பிறகு, BSF மற்றும் IAF தொடர்பான அனைத்து புகைப்படங்களும் வீடியோக்களும் அந்த எண்ணில் பகிரப்பட்டன.

தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சஹ்தேவ் சிங் பயன்படுத்திய எண்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டவை என்பது தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்தது. இதற்காக, அடையாளம் தெரியாத ஒருவர் சஹ்தேவ் சிங்குக்கு ரூ. 40,000 ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்" என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

சமீபத்தில், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் ஒரு யூடியூபர், ஒரு தொழிலதிபர், பாதுகாப்பு காவலர் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக சஹ்தேவ் சிங் கைது செய்யப்பட்டார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!
விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
Embed widget