மேலும் அறிய

குஜராத்: கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு 

குஜராத்: கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு 

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகினர். நூறு பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்து நடந்தது எப்படி? 
நேற்று மாலை 6.42 விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் 100க் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். இந்தப் பாலம் அண்மையில் தான் சீரமைக்கப்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி தான் இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷங்கவி மோர்பி பகுதிக்கு விரைந்துள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.

நிவாரணம் அறிவிப்பு:
இதற்கிடையில் மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து  நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 64% ஆக உயர்வு? தீபாவளி பரிசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 64% ஆக உயர்வு? தீபாவளி பரிசு!
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: வணிகத்திற்கு அதிர்ச்சி, வீட்டுக்கு நிம்மதி! பின்னணி என்ன?
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: வணிகத்திற்கு அதிர்ச்சி, வீட்டுக்கு நிம்மதி! பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
Embed widget