மேலும் அறிய

Corbevax: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு Corbevax ஊசியை பூஸ்டராக கொடுக்கலாம்.. அரசு குழு பரிந்துரைப்பதாக தகவல்

முதன்மை தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மாற்றாக மற்றொரு தடுப்பூசி பூஸ்டராக அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை.

புதுடெல்லி: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் மூலம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக பயோலாஜிக்கல் கார்பெவாக்ஸ் எனும் மருந்தை அனுமதிக்க கோவிட் நோய்த்தடுப்பு குறித்த அரசாங்க குழு பரிந்துரைத்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கியுள்ள "கார்பெவாக்ஸ்" தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த முன்னதாக அனுமதி கோரப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசிக்குப் பிறகு, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பூசி, "கார்பெவாக்ஸ்" ஆகும்.

முதன்மை தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மாற்றாக மற்றொரு தடுப்பூசி பூஸ்டராக அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை. தற்போது 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கார்பெவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M/o Health and Family Welfare (@mohfwindia)

இந்நிலையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) கொரோனா பணிக்குழு, ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற 48ஆவது கூட்டத்தில் இந்த பரிந்துரையை வழங்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ”18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு முதன்மை தடுப்பூசியான கோவாக்சின் / கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கார்பெவாக்ஸ் முன்னெச்சரிக்கை டோஸாகப் பரிசீலிக்கப்படலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 18 - 80 வயதுக்குட்பட்டோரில் முதல் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடையே இந்த பூஸ்டர் டோஸ் அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கார்பெவெக்ஸ் தடுப்பூசி, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும்போது ஆன்டிபாடிக்கள் கணிசமான அதிகரிப்பது கண்டறியப்பட்டது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Corbevax மருந்தை கடந்த ஜூன் 4-ஆம் தேதி இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DCGI) அங்கீகரித்தது.

தற்போது, ​​18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களில் பயன்படுத்தப்படும் அதே கொரோனா தடுப்பூசியே முன்னெச்சரிக்கை மருந்தாக வழங்கப்படுகிறது.

18-59 வயதுப் பிரிவினருக்கு 4.13 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கும் 5.11 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் 12-14 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget