மேலும் அறிய

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தாமதிக்கக்கூடாது.. மாநில அரசுகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி!

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது எனவும், விதி 200-இன் படி, சட்ட மசோதாக்கள் மீதான முடிவை ஆளுநர்கள் வேகமாக எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தரவில்லை என்று கூறி, தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தது.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருவதுடன், மசோதாக்கள் ஆளுநர்களால் நீண்ட காலம் கிடப்பில் போடப்படுவது தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை - முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ்  இடையே மோதல் முற்றி, அரசு தரப்பில் முன்னதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (ஏப்.24) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் தெலங்கானா ஆளுநர் சார்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் மாநில அரசு சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும்  ஆஜராகி வாதாடினர். அப்போது மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மசோதாக்கள் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அரசியல் சாசனப் பிரிவு 200இன் படி ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது எனச் சொல்வதாகவும் கூறி வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநர்கள் சட்ட விதி 200ஐ மனதில் கொண்டு, உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்ட மசோதாக்கள் மீதான முடிவை ஆளுநர்கள் முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

மேலும் மசோதாக்களை ஒப்புதல் இல்லாவிட்டால் கிடப்பில் போடாமல் கூடுதல் கருத்துக்களுக்காக விரைந்து குறிப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சட்ட மசோதாக்கள் மீதான முடிவுகளை ஆளுநர்கள் முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, 4 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget