மேலும் அறிய

Dog Swallow Chain: ரூ.1.25 லட்சம்.. 3 சவரன் நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்.. உரிமையாளர் செய்த காரியம்..

கேரளாவில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய தங்க செயினை உரிமையாளர் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய தங்க செயினை உரிமையாளர் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்கம் விலை:

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்க நகை ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இன்றைய தேதிக்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. இதனால் புதியதாக நகையை வாங்காவிட்டாலும், இருப்பதையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென கண்ணும் கருத்துமாக உள்ளனர்.  இந்நிலையில், ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 3 சவரன் தங்க செயினை வளர்ப்பு நாய் விழுங்கி விட்டால் அப்படியே விட்டு விட முடியமா என்ன. அவ்வாறு கேரளாவில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய செயினை அதன் உரிமையாளர் பத்திரமாக மீட்டுள்ளார். 

நடந்தது என்ன?

பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 சவரன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார். தனது வேலைகளை முடித்துக்கொண்டு சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்த போது கண்ணாடி முன்பு தான் வைத்த அந்த நகையை காணவில்லை. இதனால் பதறி போன பேபி,  வீடு முழுவதும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் நகையை காணவில்லை.

திருடியது யார்?

நகை படுக்கை அறையில் உள்ள கண்ணாடி முன்புதான் வைத்தேன், வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. அதன்பிறகு நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் அந்த பெண் குழம்பி போனார். அப்போதுதான் வீட்டில் தான் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த ஒரு பென்சிலை கடித்து குதறி அப்படியே விழுங்கியது. இதை கவனித்த பேபிக்க, தனது நகையை நாய் விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவம் தொடர்பாக தனது கணவரிடம் கூறிய பேபி, தனது வளர்ப்பு நாயை மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்ததில், பேபியின் செயின் நாயின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது.

செயினை மீட்டது எப்படி?

இதையடுத்து நகையை மீட்பதோடு, செயின் தொடர்ந்து உள்ளேயே இருந்தால் நாயின் உயிருக்கும் ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நகையை அகற்ற மருத்துவர் பரிந்துரைத்தார். இருந்தாலும் ஒரு சிறு முயற்சியாக மலத்துவாரம் வழியாக நகையை வெளியே எடுப்பதற்காக நாய்க்கு, ரொட்டி மற்றும் பழங்களை கொடுத்துள்ளனர். ஆனால், நகை வெளியே வராததால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதற்காக இறுதியாக நாய்க்கு ஒருமுறை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது, செயின் வெளியே வரும்  நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனே நாய்க்கு பேதி மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது எங்கேயும் வெளியே சென்றுவிடாமல் வீட்டில் இருந்தோர் கண்காணித்தனர். மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்தது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget