![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் Election Commission of India has announced that the election for 56 Rajya Sabha member posts will be held on February 27 Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/8ac4c1706d41f14b1cda29e4e7d7cbe31706519557234571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் - 10, பீகார், மஹாராஷ்டிரா தலா 6, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 உள்பட மொத்தம் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
முழு விவரம்:
15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள்.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் 9 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இதில், பாஜக தலைவர் ஜேபி நட்டா (ஹிமாச்சலப் பிரதேசம்), ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மஹாராஷ்டிரா), கல்வி அமைச்சர் தர்மேந்திரா ஆகியோர் அடங்குவர். பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்.
எந்தெந்த மாநிலத்தில் எத்தனை இடங்கள் காலியாகின்றன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (ராஜஸ்தான்) பதவிக்காலமும் இந்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. ஏப்ரல் 2, 2024 அன்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1 ராஜ்யசபா எம்.பி., ஓய்வு பெறுகிறார்.
மகாராஷ்டிராவில் இருந்து ஓய்வுபெறும் ராஜ்யசபா எம்.பி.க்களில் ரானே, முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாஜக மூத்த தலைவர் வி.முரளீதரன் ஆகியோர் அடங்குவர்.
சிவசேனா (யுடி) எம்பி அனில் தேசாய், என்சிபியின் வந்தனா சவான் மற்றும் காங்கிரஸின் குமார் கேட்கர் ஆகியோரும் ஓய்வு பெறவுள்ளனர்.
தேர்தல் வேட்புமனு:
இந்த தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என்றும், பிப்ரவரி 15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)