மேலும் அறிய

TR Balu: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட தராத மத்திய அரசு .. டி.ஆர்.பாலு காட்டம்

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் மக்களவையில் திமுக எம்.பி.,யும், நாடளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு உரையாற்றினார். 

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வரவில்லை என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் மக்களவையில் திமுக எம்.பி.,யும், நாடளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு உரையாற்றினார். 

அப்போது, ‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல விஷயங்களில் பாராமுகம் காட்டுகிறது. குறிப்பாக நீட் விலக்கு, வெள்ள நிவாரணம், மதுரை எய்ம்ஸ், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணி, சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டிக் காட்டினார். மேலும் தமிழ்நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகள் குழு பார்வையிட்டனர். பின்னர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். 

அனைத்து கட்சி எம்.பி.,க்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நேரில் வற்புறுத்தினோம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை என ஆதங்கப்பட்டு பேசினார். தொடர்ந்து பேசிய டி. ஆர்.பாலு, குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களை சேர்க்கப்படாததை பற்றி குறிப்பிட்டு பேசினார். மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இவற்றை ஏற்கவில்லை. 2014 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி சொன்னார். 

அப்படி பார்த்தால் இதுவரை 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, ஜி.எஸ்.டி. திட்டத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசினார். சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை. மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத்தை குறைந்தப்பட்சம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இறுதியாக தனது உரையில் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர்களின் தலையீடு குறித்தும் பேசினார். 


மேலும் படிக்க: Actor Vijay: ஆரம்பமே அதிரடி: அரசியல் சூழலை சரமாரியாக விமர்சித்த விஜய்- பயணிக்கப்போகும் பாதை என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
IND Vs ENG: கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
Embed widget