மேலும் அறிய

Delimitation Bill: எங்களுக்கு தேசப்பற்று இல்லையா? - பாஜக எம்.பி.யை வெளுத்து வாங்கிய ஆ.ராசா

நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்த நிலையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, திமுக எம்பி ஆ.ராசா இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது கூட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மாற்றியமைக்கும் பொருட்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. இதற்கான விவாதம் இன்று இரு அவைகளிலும் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்றத்தில் 543 என இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தென் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் இதனால் குறையும் எனவும் கூறப்படுகிறது. 

அதனால் தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை விஷயத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.  இன்றைய கூட்டத்தொடரில் கருப்பு உடை அணிந்து திமுக எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அதன் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்தும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இதற்கிடையில், “மக்களவையில் பெங்களூரு தெற்குத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேசுகையில், “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ள தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு தற்ஓது முன்மொழிந்துள்ளதை விட சிறந்த இடங்கள் கிடைக்காது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இதை விட சிறந்த ஒப்பந்தம் கிடைக்காது. தொகுதி மறுவரையறையை ஒரு பாதகமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தில் திமுக நடத்தும் போராட்டங்கள் நாடகம் என விமர்சித்தார். மசோதாக்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறது” என குற்றம் சாட்டினார். 

இதுதொடர்பாக பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, “1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்த போது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். இது மற்ற மாநிலங்களை விட அதிகம். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கில் போருக்கான கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ரூ.100 கோடி கொடுத்தது. 
எனவே நாட்டுப்பற்றை அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை.

நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும்போது அதை எதிர்க்கிறோம். மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காத போது அதை எதிர்க்கிறோம்” என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Top 10 News Headlines: திமுகவின் பண்ணையார் மனப்பான்மை, 60% ஊதிய உயர்வு, ஐபிஎல் பிளே-ஆஃப்- 11 மணி வரை இன்று
திமுகவின் பண்ணையார் மனப்பான்மை, 60% ஊதிய உயர்வு, ஐபிஎல் பிளே-ஆஃப்- 11 மணி வரை இன்று
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget