மேலும் அறிய

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழக, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த இயந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த இந்த 5 மாநிலங்களிலும் ஏதேனும் வழக்குகள் தொடரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அவை பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. 

சட்டவிதிகளின் படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் தேர்தல் முடிந்த 45 நாட்களுக்கு இவ்வாறாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவரை தான் தோல்வியடைந்த வேட்பாளர் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க முடியும். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியே 100 நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்தல் தோல்வி தொடர்பான மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகவில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையமோ இதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், "அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தர்காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு,  இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 4.5 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறைந்தது 4.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வசம் தற்போது 3.2 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் மட்டுமே உள்ளன.

உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கால அவகாசத்தை நீட்டித்து புதிய உத்தரவைப் பிறப்பித்து விரைவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை 5 மாநிலங்களில் இருந்து விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget