மேலும் அறிய

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழக, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த இயந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த இந்த 5 மாநிலங்களிலும் ஏதேனும் வழக்குகள் தொடரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அவை பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. 

சட்டவிதிகளின் படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் தேர்தல் முடிந்த 45 நாட்களுக்கு இவ்வாறாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவரை தான் தோல்வியடைந்த வேட்பாளர் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க முடியும். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியே 100 நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்தல் தோல்வி தொடர்பான மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகவில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையமோ இதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், "அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தர்காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு,  இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 4.5 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறைந்தது 4.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வசம் தற்போது 3.2 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் மட்டுமே உள்ளன.

உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கால அவகாசத்தை நீட்டித்து புதிய உத்தரவைப் பிறப்பித்து விரைவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை 5 மாநிலங்களில் இருந்து விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget