மேலும் அறிய

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழக, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த இயந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த இந்த 5 மாநிலங்களிலும் ஏதேனும் வழக்குகள் தொடரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அவை பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. 

சட்டவிதிகளின் படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் தேர்தல் முடிந்த 45 நாட்களுக்கு இவ்வாறாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவரை தான் தோல்வியடைந்த வேட்பாளர் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க முடியும். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியே 100 நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்தல் தோல்வி தொடர்பான மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகவில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையமோ இதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு

தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், "அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தர்காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு,  இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 4.5 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறைந்தது 4.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வசம் தற்போது 3.2 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் மட்டுமே உள்ளன.

உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கால அவகாசத்தை நீட்டித்து புதிய உத்தரவைப் பிறப்பித்து விரைவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை 5 மாநிலங்களில் இருந்து விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment
DMK MLA Vs Thanga Tamilselvan | ’’ஏன்டா..டேய் ராஸ்கல் ‘’திமுக MLA vs தங்கதமிழ்ச்செல்வன் கடும் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!
Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!
Tamilnadu Roundup: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நாளை வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை தொடக்கம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நாளை வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை தொடக்கம் - தமிழகத்தில் இதுவரை
TN weather Report: வீக் எண்ட் போச்சா? 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னை வானிலை நிலவரம் என்ன?
TN weather Report: வீக் எண்ட் போச்சா? 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னை வானிலை நிலவரம் என்ன?
Embed widget