மேலும் அறிய

இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை.. ஹரியானாவில் பரோலில் வெளியில் வரும் சாமியார்!

ஹரியானா மாநிலத்தின் பாஜக அரசு சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் பாஜக அரசு சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஹரியானாவின் ரோஹ்தக் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு, தனது மேலாளரைக் கொலை செய்த வழக்கும் அவர் மீது இருக்கிறது. 

தான் சிறையில் அடைக்கப்பட்டது முதல் தற்போது முதன்முறையாக பரோல் பெற்றாலும், குர்மீத் ராம் ரஹிம் சிங் இதுவரை நான்கு முறை furlough என்று அழைக்கப்படும் விடுப்பு பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், அவருக்கு மூன்று வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. 

பரோல் என்பது சிறைவாசியின் நன்னடத்தை காரணமாக, சிறப்புக் காரணம் ஒன்றிற்காகவோ, தேவைப்படுவதற்காகவோ தற்காலிகமாக சிறைவாசியை வெளியில் அனுப்புவதாகும். அதே வேளையில் furlough என்பது சிறைவாசிகளுக்கான குறுகிய கால இடைவெளியில் அளிக்கும் விடுப்பு ஆகும்.

 இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை.. ஹரியானாவில் பரோலில் வெளியில் வரும் சாமியார்!

ஹரியானாவின் சிர்சா பகுதியில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையிடத்தில் தனது இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தற்போது 20 ஆண்டுக் கால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. 

கடந்த ஆண்டு, தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2002ஆம் ஆண்டு நால்வருடன் சேர்ந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங்கைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர் மீது மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு செய்தியாளர் ஒருவரின் கொலை வழக்கிலும், கடந்த 2019ஆம் ஆண்டு குர்மீத் ராம் ரஹிம் சிங் உள்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பரோலில் சிறையில் இருந்து வெளியில் வரும் குர்மீத் ராம் ரஹிம் சிங், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள பர்னவா பகுதியில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்திற்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.