மேலும் அறிய

இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை.. ஹரியானாவில் பரோலில் வெளியில் வரும் சாமியார்!

ஹரியானா மாநிலத்தின் பாஜக அரசு சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் பாஜக அரசு சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஹரியானாவின் ரோஹ்தக் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு, தனது மேலாளரைக் கொலை செய்த வழக்கும் அவர் மீது இருக்கிறது. 

தான் சிறையில் அடைக்கப்பட்டது முதல் தற்போது முதன்முறையாக பரோல் பெற்றாலும், குர்மீத் ராம் ரஹிம் சிங் இதுவரை நான்கு முறை furlough என்று அழைக்கப்படும் விடுப்பு பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், அவருக்கு மூன்று வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. 

பரோல் என்பது சிறைவாசியின் நன்னடத்தை காரணமாக, சிறப்புக் காரணம் ஒன்றிற்காகவோ, தேவைப்படுவதற்காகவோ தற்காலிகமாக சிறைவாசியை வெளியில் அனுப்புவதாகும். அதே வேளையில் furlough என்பது சிறைவாசிகளுக்கான குறுகிய கால இடைவெளியில் அளிக்கும் விடுப்பு ஆகும்.

 இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை.. ஹரியானாவில் பரோலில் வெளியில் வரும் சாமியார்!

ஹரியானாவின் சிர்சா பகுதியில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையிடத்தில் தனது இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தற்போது 20 ஆண்டுக் கால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. 

கடந்த ஆண்டு, தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2002ஆம் ஆண்டு நால்வருடன் சேர்ந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங்கைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர் மீது மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு செய்தியாளர் ஒருவரின் கொலை வழக்கிலும், கடந்த 2019ஆம் ஆண்டு குர்மீத் ராம் ரஹிம் சிங் உள்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பரோலில் சிறையில் இருந்து வெளியில் வரும் குர்மீத் ராம் ரஹிம் சிங், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள பர்னவா பகுதியில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்திற்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget