மேலும் அறிய

பணமதிப்பிழப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தால், மத்திய அரசு அதை நிராகரித்திருக்குமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார். 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மேல் குறிப்பிட்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நரேந்திர மோடி அரசின் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு எதிரான மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார். 

இதில், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் கேள்விக்கே இடமில்லை என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கேள்வியை மத்திய அரசிடம் எழுப்பியிருந்தது. பணமதிப்பிழப்பு கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்திருந்தால், அந்த ஆட்சேபனையை மத்திய நிராகரித்திருக்குமா என மத்திய அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்படவிலலை, அரசிதழில் அறிவிப்பாக வெளியிடப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

கோடிக்கணக்கான மக்களை மோசமாக பாதித்த இம்மாதிரியான நடவடிக்கைகள் அரசிதழில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றி இருக்கக் கூடாது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததது. மத்திய அரசின் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் வாதம் முன்வைத்தனர்.

இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகார்ஜுனா, "இந்த நடவடிக்கை [பணமதிப்பிழப்பு] மத்திய அரசிடமிருந்து வெளியிடப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்.

 

ரிசர்வ் வங்கி, தனது ஆழ்ந்த அறிவுதளத்திலிருந்து, இப்போது அதைச் செய்வது சரியல்ல, அல்லது அதைச் செய்வதே சரியல்ல எனக் கூறி, தனது விருப்பத்தை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், அப்போது என்ன நடந்திருக்கும்? அதை மத்திய அரசு ஒதுக்கித் தள்ளுமா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், "இந்த கேள்வி இந்த வழக்கில் எழவே இல்லை. பணமதிப்பிழப்பு அறிவிப்பு பின்னர் நாடாளுமன்ற சட்டமாக்கப்பட்டது. நாடாளுமன்றம், அரசாங்கத்துடன் உடன்பட்டது. தவிர, இறையாண்மை கொண்ட சக்தியாக, ரிசர்வ் வங்கியுடன் உடன்படாமல் இருப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு உள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget